3-ம் மொழி குறித்த தரவுகளை பெற மார்ச் 1-ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை தகவல்

சென்னை: குழந்தை​களுக்கு விருப்​பமான மூன்​றாம் மொழி குறித்த தரவு​களைப் பெறும் கையெழுத்து இயக்கம் மார்ச் 1-ம் தேதி முதல் நடத்​தப்​படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரி​வித்​தார்.

சென்னை​யில் செய்தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் 2016-ம் ஆண்டு சட்டப்​பேர​வைத் தேர்தல் வாக்​குறு​தி​யில், இந்தி உள்ளிட்ட ஏதேனும் ஒரு விருப்​பமொழியைப் பயிற்று​விக்க வேண்​டும் என்று தெரி​வித்​துள்ளார்.

தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்து​கிறார். இவ்வாறு, சிபிஎஸ்இ பள்ளி நடத்தி, தனது பிள்​ளைகளை வெவ்​வேறு மொழிகளைப் படிக்க வைத்து​விட்டு, எந்த அர்த்​தத்​தில் தமிழகத்​தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் 2 மொழியைப் படிக்க வேண்​டும் என்கின்​றனர்.கலாநிதி வீராசாமி எம்.பி. நடத்​தும் மெட்​ரிக் பள்ளி​யில் தமிழ் கட்டாயமல்ல. தமிழகத்​தில் மார்ச் 1 முதல் மூன்​றாவது மொழியாக எந்த மொழியைப் படிக்க குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்​கிறது என்பதை கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவரிடம் சமர்ப்​பிப்​போம்.

கேந்​திரிய வித்​யாலயா பள்ளி​களுக்கு தமிழாசிரியர்கள் வேண்​டும் என்று கோரி நாளை காலை கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கடிதம் எழுதினால், மாலை​யிலேயே உரிய நடவடிக்கை எடுப்​போம். இதை சவாலாக கூறுகிறேன். தமிழகத்​துக்கு 100 கேந்​திரிய வித்​யாலயா பள்ளி, நவோதயா பள்ளிகளைக் கொண்டு வருவோம். இதற்கான இடம் ஒதுக்க அமைச்சர் தயாரா? தமிழகத்​தில் 30 லட்சம் பேர் மும்​மொழிக் கொள்​கையை படிப்​ப​தாக, தமிழக அரசு மழுப்​பலாக பதில் அளிக்​கிறது. இந்த விவகாரத்​தில் அரசு வெள்ளை அறிக்கை ​கொடுக்க வேண்​டும். ​இந்தி ​திணிப்பு கிடை​யாது. இவ்​வாறு அண்​ணாமலை தெரி​வித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.