புயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: பிரேமலதா வரவேற்பு

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட விவசா​யிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்த தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா வரவேற்பு தெரி​வித்​துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட விவசாய மக்களுக்​கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்​துள்ளது வரவேற்​கத்​தக்​கது. அதன்படி மொத்தம் 5.18 லட்சம் விவசா​யிகள் பயன்​பெறும் வகையில் ரூ.498.80 கோடி ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்​திருக்​கிறது. இந்த அறிவிப்​பானது ஒட்டுமொத்த விவசாய மக்களின் வயிற்றில் பால்​வார்க்​கும் செய்தி​யாகும்.

விழுப்பு​ரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடு​துறை போன்ற பகுதி​களில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட விவசா​யிகளை​யும், மழை வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட விவசா​யிகளை​யும் தேமுதிக சார்பாக சென்று பார்​வை​யிட்டு தமிழக அரசிடம் நிவாரணத் தொகையை கட்டாயம் வழங்க வேண்​டும் என தொடர்ந்து வலியுறுத்​தினேன்.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட விவசா​யிகளுக்​கும் நிவாரண தொகையை வழங்க இருப்பது மகிழ்ச்​சி அளிக்கிறது. அத்தொகையை உடனடியாக வங்கிக் கணக்​குக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும். தமிழக அரசுக்கு தேமு​திக சார்​பில் மன​மார்ந்த வாழ்த்​து​கள். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.