காங்கிரஸுக்கு நான் தேவையில்லை என்றால் உலகளவில் எனக்கு வேறு வாய்ப்புகள் நிறைய உள்ளன – சசிதரூர் எம்.பி. தகவல்

திருவனந்தபுரம்: ‘‘​காங்​கிரஸ் கட்சிக்கு எனது சேவை தேவை​யில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன’’ என்று கட்சி மேலிடத்​துக்கு சசிதரூர் எம்.பி. திட்​ட​வட்​ட​மாகக் கூறி​யுள்​ளார்.

கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் மக்களவை தொகுதி சசிதரூர் எம்.பி. காங்​கிரஸ் கட்சி​யின் மூத்த தலைவராக 4-வது முறை எம்.பி. பதவி வகிக்​கிறார். இவர் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை அவ்வப்​போது பாராட்டி வருகிறார். சமீபத்​தில் கூட பிரதமர் மோடி அமெரிக்​கா​வில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேசியதை பாராட்​டி​யிருந்​தார்.

இதனால் காங்​கிரஸ் மேலிடத் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்​தனர். இந்நிலை​யில், கேரள மாநிலத்​தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை மிகவும் பாராட்டி ஒரு கட்டுரை எழுதி​யிருந்​தார்.

இந்நிலை​யில், ‘வர்த்​தமனம்’ என்ற தலைப்​பில் மலையாள மொழி​யில் வெளியான பாட்​காஸ்ட் வீடியோ நாளை வெளியாக உள்ளது. அதன் டீசர் ஏற்கெனவே வெளி​யிடப்​பட்​டது. அதில் சசிதரூர் கூறி​யிருப்​ப​தாவது:

காங்​கிரஸ் கட்சிக்கு நான் தேவை​யில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் நிறைய உள்ளன. அமெரிக்​கா​வில் சந்தோஷமாக இருந்​தேன், நிறைய சம்பா​தித்து வந்தேன். ஆனால், நாட்டுக்கு சேவை செய்ய வேண்​டும் என்று இங்கு வந்தேன். கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்து வருவதை பாராட்​டினேன். மக்கள் என்னுடைய கருத்து சுதந்​திரத்​தைப் பாராட்டு​கிறார்​கள். கட்சி​யில் நான் வேண்​டும் என்று நினைத்​தால் இருப்​பேன். அப்படி இல்லா​விட்​டால், எனக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. எனக்கு வேறு வழி எதுவும் இல்லை என்று நீங்கள் நினைத்து​விடக் கூடாது.

எனக்கு புத்​தகங்கள் இருக்​கின்றன. பல்வேறு நிகழ்ச்​சிகளில் உரையாற்று​வேன், உலகள​வில் பல்வேறு நிகழ்ச்​சிகளில் பேசுவதற்கு எனக்கு அழைப்புகள் வருகின்றன.

கடந்த 2024-ம் ஆண்டு மக்களவை தேர்​தலில் காங்​கிரஸ் கட்சிக்கு மறுமலர்ச்சி ஏற்பட்​டது. ஆனால், மாநில தேர்​தல்​களில் அது எதிரொலிக்க​வில்லை. தேசிய அளவில் காங்​கிரஸ் கட்சிக்கு 19 சதவீத வாக்​குகளே உள்ளன. அதை வைத்​துக் கொண்டு மத்தி​யில் ஆட்சி அமைக்க முடி​யாது. கூடு​தலாக 26 – 27 சதவீத வாக்​கு​கள் பெற்​றால்​தான் ஆட்​சியை பிடிக்க ​முடி​யும். கடந்த 2 மக்​களவை தேர்​தல்​களில் நம்மை ஆதரிக்​காதவர்​களின் வாக்​கு​களைப் பெற வேண்​டும். இவ்​வாறு சசிதரூர்​ கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.