காசி தமிழ்ச் சங்கமம் கருப்பொருளாக அகத்தியர் தேர்வானது எப்படி?

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ்) 3.0 நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கடந்த 2023 நவம்​பரில் நடத்​தப்​பட்ட கேடிஎஸ் 2.0 வில் அகத்​தியர் பிறந்த நாள் விழா மற்றும் அவரை பற்றிய கருத்​தரங்கம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு கேடிஎஸ் நிகழ்ச்​சி​யில் அகத்​தியர் கருப்​பொருளாக தேர்வு செய்​யப்​பட்​டார்.

காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த வழக்​கறிஞர் ஷாமா பட்டின் பெற்​றோர், பல ஆண்டு​களுக்கு முன்பே கர்நாடகா​வுக்கு இடம் பெயர்ந்​துள்ளனர். கர்நாட​கா​வில் பிறந்து வளர்ந்த ஷாமா பட், மங்களூரு​வில் பிரபல வழக்​கறிஞராக பணியாற்றுகிறார். இவர்​தான் அகத்​தியர் பற்றி அறிந்து அதை ஆதாரங்​களுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் தெரியப்​படுத்தி உள்ளார்.
இதை படித்து வியப்​படைந்த பிரதமர் மோடி, அகத்​தி​யரின் பெரு​மையை காசி தமிழ்ச் சங்கமங்கள் மூலமாக வெளிப்​படுத்த முடிவு செய்​துள்ளார்.

இதுகுறித்து கேடிஎஸ் 3.0 நிகழ்ச்​சிக்கு வந்த வழக்​கறிஞர் ஷாமா பட், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறிய​தாவது: மைசூரில் எங்களது விளை நிலங்​கள், நிலச் சீர்​திருத்தச் சட்டத்​தால் இந்து, முஸ்​லிம் குடும்​பங்​களிடம் சென்று விட்டன. அங்கு நான் ஒருமுறை நேரில் சென்றபோது அந்த நிலத்​தில் அதிகள​வில் நாகப் பாம்​புகள் வருவ​தாகத் தெரி​வித்​தனர். அப்போது​தான், அந்த நிலத்​தில் கோயில் இருந்​திருக்​கலாம் என்ற ஐயம் எழுந்​தது. அதன்​பின், கிருஷ்ண நாயக் நிலத்​தில் அகழாய்வு செய்​த​தில் துர்கை அம்மன் கோயி​லின் அடித்​தளம் கிடைத்​தது.

இக்கோ​யிலை மீண்​டும் கட்ட விரும்பி நான் நாயக்​குக்கு மாற்று நிலம் கொடுத்து விட்​டேன். இந்த கோயிலை பற்றி அகத்​தி​யரின் பெருநூல் காவியம் பாடல்​களில் இடம்​பெற்​றதை​யும் கண்டறிந்​தேன். இப்படித்​தான் நான் அகத்​தி​யரைப் பற்றிய தேடலுக்கு சென்​றேன். தமிழக அரசுத் துறை​யில் பணியாற்றிய முனைவர் பி.கார்த்தி​கேயன் ஆங்கிலத்​தில் எழுதிய ‘History of Medical Sciences of Siddhas of Tamilnadu (மருத்துவ அறிவியல் வரலாற்றில் தமிழ்​நாட்​டின் சித்தர்​கள்)’ எனும் நூலை படித்​தேன்.

தமிழகத்​தின் பழங்கால சித்தர்களை நன்கு ஆராய்ச்சி செய்து அவர் எழுதி​யுள்​ளார். இந்த நூல் என்னை தமிழ் இலக்​கி​யத்தை நோக்கி பயணிக்க வைத்​தது.

எனக்கு கிடைத்த அகத்​தியர் பற்றிய தகவல்​களை, மத்திய கல்வி அமைச்​சகப் பிரிவான பாரதிய பாஷா சங்கத் தலைவர் பத்ம சாமு கிருஷ்ண சாஸ்​திரி​யிடம் தெரி​வித்​தேன். அவர்​தான் பிரதமர் மோடி​யின் கவனத்​துக்கு கொண்டு சென்​றுள்​ளார். அதன்​பிறகு பிரதமரின் ஆலோசனைப்படி கேடிஎஸ் 3.0-ன் கருப்​பொருளாக அகத்​தியர் இடம் பெற்றுள்​ளார். கர்நாட​கா​வின் தளகிரி​யில் அகத்​தி​யரின் ஓலைச்​சுவடிகள் நிறைந்​துள்ளன. அகத்​தியர் தன் பாடல்களில் மனித சமூகம், நிலம், விலங்கு​கள் பற்றி​யும் ஏராளமான தர​வுகளைப் ப​திவு செய்​துள்ளார். இத​னால் அகத்​தி​யரின் ஓலைச் சுவடிகள் மொழி​யாக்​கம் செய்ய வேண்டிய தேவையை உணர்ந்து அ​தி​லும் இறங்​கி​யுள்​ளேன். இவ்​வாறு ஷா​மா பட்​ கூறினார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.