மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் நாளை மோதல்

லக்னோ,

5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. அங்கு 6 போட்டிகள் நடைபெற்றது. 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூரில் கடந்த 21-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. அங்கு 8 போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும்.

இதையடுத்து, இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் நாளை முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. நாளை லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2 வெற்றி, 3 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறி விட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு அணியும் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்னும் 2 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். அந்த இரு இடங்களை பிடிக்க 4 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.