கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் இயக்கம் கடந்த வாரம் தடைபட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக பந்திற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த கன்னட கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இது யாருடைய தனிப்பட்ட காரணங்களுக்காகவும் நடத்தப்படும் பந்த் அல்ல, இது கன்னட மக்களுக்காக, கன்னடர்களுக்காக, கர்நாடகாவின் […]
