கோபிசெட்டிபாளையம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 2026 சட்டசபை தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது அந்தியூர் நிர்வாகிகளுக்கு எந்த கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படுவது இல்லை என்று கட்சி நிர்வாகி ஒருவர் புகார் கூறியதாக தெரிகிறது. மேலும் புகார் கூறியவரை செங்கோட்டையன் மேடைக்கு அழைத்துப் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதல் முற்றியநிலையில், அது கைகலப்பாக மாறியது. […]
