ஜாம்ஷெட்பூர்,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. – ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. அணி சார்பில் டோரி ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஹியூகோ 37 மற்றும் 53-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ஜோர்டான் முர்ரே ஆட்டத்தின் 84-வது நிமிடத்திலும், ஸ்டீபன் 90+1வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஒடிசா எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒடிசா எப்.சி. அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது.