ராமேஸ்வரம் ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் 5 நாட்களுகு பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஐந்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை நேற்று மாலை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் […]
