உ.பி.யில் ரூ.22 கோடியில் 51 அடி சிலையுடன் ராமர் பூங்கா: மலர் கண்காட்சி நடத்திய தமிழக அதிகாரி மணிகண்டன்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தின் பரேலி​யில் ரூ.22 கோடியில் ‘ரா​மாயண் வாட்​டி​கா’ எனும் பெயரில் ஒரு புதிய அழகான பூங்கா 6 ஏக்கரில் அமைக்​கப்​படு​கிறது.

இப்​பூங்​கா​வில் 51 அடி உயர ராமர் சிலை நிறு​வப்​படு​கிறது. உலகின் மிகப்​பெரிய குஜ​ராத்​தில் வல்​லப​பாய் படேல் சிலையை வடித்த பத்ம ஸ்ரீ ராம் சுத்​தார் இந்த சிலையை வடித்​துள்​ளார். ராமர் கடந்த சித்​ரகுட், கிஷ்கிந்​தா, துரோணகிரி உள்​ளிட்ட 6 வனப்​பகு​தி​களின் 60 சிற்​பக் காட்​சிகளும் பூங்​கா​வில் வடிவ​மைக்​கப்​படு​கின்​றன.

பரேலி வளர்ச்சி ஆணை​யம் சார்​பில் இந்த பூங்​காவை அதன் துணைத் தலை​வர் அதி​காரி மணி​கண்​டன் அமைத்து வரு​கிறார். பூங்கா பணி​கள் முடி​யும் தரு​வா​யில் அதற்​குள் ஒரு மலர்க் கண்​காட்​சிக்​கும் இவர் ஏற்​பாடு செய்​திருந்​தார். இந்த கண்​காட்​சி​யில் ராமாயணத்​தில் ராமர் கடந்து சென்ற வனத்​தில் பூத்த மலர்​களும் காட்​சிப்​படுத்​தப்​பட்​டன. முழு தோட்​ட​மும் லட்​சக்​கணக்​கான மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த வெள்​ளிக்​கிழமை தொடங்​கிய மலர்க் கண்​காட்சி நேற்​றுடன் முடிந்​தது. இதை நடத்​திய தமிழ​ரான அதி​காரி மணி​கண்​ட​னுக்கு பாராட்​டுக்​கள் குவி​கின்​றன.

இந்த பூங்​கா​வில் பல மாதங்​களுக்கு முன்​னர் சுமார் 1,600 பூஞ்​செடிகள் நடப்​பட்​டன. மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்ட ராமர், சீதை, ஹனு​மர் உள்​ளிட்ட கடவுள்​களின் வடிவங்​கள் மலர்​களால் அலங்​கரித்து காட்​சி​யில் இருந்​தன. இதற்​காக சுமார் 50,000 வகைப் பூக்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. சிவபெரு​மானை ராமர் புகழ்ந்து பாடும் வகை​யில் பாபா கேதார்​நாத் கோயி​லின் மாதிரி, மலர்​களால் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் நெய்​வேலியை சேர்ந்த தமிழர் அதி​காரி மணி​கண்​டன் ஐஏஎஸ் கூறும்​போது, “ஆன்​மிகம் மற்​றும் கலாச்​சா​ரத்தை பிர​திபலிக்​கும் வகை​யில் ராமாயண் வாட்​டிகா அமைக்​கப்​படு​கிறது. இன்​னும் 3 மாதங்​களில் திறக்​கப்பட உள்ள பூங்​கா​வில், தற்​போதுநடத்​திய மலர்க் கண்​காட்​சி, இனி ஒவ்​வொரு ஆண்​டும் மகா சிவ​ராத்​திரிக்​காக 3 நாட்​கள்​ நடை​பெறவுள்​ளது” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.