மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்

தாம்பரம்: சென்னை எழும்பூர் – கடற்​கரை இடையே நான்​காம் வழித்​தடம் அமைக்​கும் பணி​கள் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்ள நிலை​யில் நேற்று காலை 5.10 மணி​முதல் மாலை 4.10 மணிவரை சென்னை கடற்​கரை – தாம்​பரம் இடையே புறநகர் மின்​சார ரயில் சேவை ரத்து செய்​யப்பட்டது. அதே​போல செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திரு​மால்​பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்​கப்​படும் ரயில்​கள், தாம்​பரம் வரை மட்​டுமே இயக்​கப்​பட்டன.

பயணி​கள் வசதிக்​காக தாம்​பரம் – கோடம்​பாக்​கம் இடையே 30 நிமிட இடைவெளி​யில் சிறப்பு ரயில்கள் இயக்​கப்​பட்டன. ரயில்​கள் ரத்தால் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் பேருந்​தில் செல்​வதற்​காக பேருந்து நிலை​யத்​தில் திரண்டதால் தாம்​பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாம்பரம் – கடற்கரை இடையே நேற்று பகல் முழுவதும் மின்சார ரயில் சேவை
நிறுத்தப்பட்டதால், குரோம்பேட்டை ரயில் நிலையம்
மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

30 நிமிட இடைவெளி​யில் சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​பட்​ட​தால் சிறப்பு ரயிலைப் பிடிப்​ப​தற்கு ஆயிரக்​கணக்​கானோர் கூடிய​தால் ரயில் நிலை​யத்​தி​லும் பரபரப்பு ஏற்​பட்​டது. மதி​யம் 12 ​முதல் 2 மணி வரை முழு​மை​யாக மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்​பட்​ட​தால் பயணி​கள் பேருந்து நிலை​யங்களுக்கு படையெடுத்தனர். 4.10 மணிக்கு பிறகு ஞாயிற்​றுக்​கிழமை அட்​ட​வணைப்​படி மின்​சார ரயில்​கள் மீண்​டும் இயக்​கப்​பட்​ட​தால், படிப்​படி​யாக கூட்ட நெரிசல்​ குறை​யத்​ தொடங்​கியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.