ஏப்ரல் 2025 முதல் ஹோண்டா கார்களின் விலை உயருகின்றது


பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் விலையும் ஏப்ரல் 1, 2025 முதல் உயர்த்தப்பட உள்ளது. ஆனால் எத்தனை சதவீதம் உயர்த்தப்படும் என குறிப்பிடவில்லை.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ” உற்பத்தி மூலப்பொருட்களின் செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்ய இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுகிறது. மேஸ், சிட்டி, சிட்டி இ:ஹெச்இவி மற்றும் எலிவேட் போன்ற மாடல் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என இந்நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் வேரியண்ட் வாரியான விலையை தற்பொழுது அறிவிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.