ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட கேம்கள் தொடர்பான விளம்பரங்களில் நடித்ததற்காக பிரபல நடிகர்களான பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 19 பேர் மீது ஹைதராபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்திருக்கிறார். ” 9 வருடங்களுக்கு முன் 2016-ல் ஒரு வருடம் ஒப்பந்தம் போட்டு ஆன்லைன் கேமிங் விளம்பரம் ஒன்றில் நான் நடித்தேன்.
.png)
அது தவறென சில மாதங்களில் உணர்ந்ததால், ஒரு வருடம் கழித்து 2017ல் அந்த விளம்பரத்தை நீட்டிக்க மறுத்துவிட்டேன். பின் அத்தகைய விளம்பரங்களில் நான் நடிக்கவில்லை. 2021-ல் அந்நிறுவனம் அந்த விளம்பரத்தை மீண்டும் பயன்படுத்திய போதுகூட, நான் நோட்டீஸ் அனுப்பிவிட்டேன். இளைஞர்களே… கேமிங் செயலிகளை பயன்படுத்தாதீர்கள், உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள்” என்று கூறி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
My response #SayNoToBettingAps #justasking pic.twitter.com/TErKkUb6ls
— Prakash Raj (@prakashraaj) March 20, 2025
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks