சென்னை: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1087 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டடுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14-ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெறும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் நோக்கில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ன் கீழ், வரும் ஆண்டில் 2,329 கிராம ஊராட்சிகளில் ரூ.1,087 கோடியில் […]
