சென்னை: சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி – கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டைக்கு மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40, காலை 10.15, நண்பகல் 12.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு அதே தேதிகளில் காலை 10.30, முற்பகல் 11.35, மதியம் 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டிக்கு அதே தேதிகளில் நண்பகல் 12.40, பிற்பகல் 2.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரைக்கு அதே தேதிகளில் பிற்பகல் 2.30, 3.15, மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. ஆவடி – சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலூர்பேட்டை – நெல்லூருக்கு காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
கும்மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரலுக்கு அதே தேதிகளில் மதியம் 1.00, பிற்பகல் 3.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு அதே தேதிகளில் நண்பகல் 12.35, மதியம் 1.15, பிற்பகல் 3.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
பகுதி ரத்து: செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. கும்மிடிப்பூண்டி – தாம்பரத்துக்கு அதேநாட்களில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு பதிலாக, அதேநாட்களில், சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, சென்னை – எண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.