பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதி வருகின்றனர். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.
அதேபோல், கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு 27-ம் தேதியுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என 9 லட்சத்து 13 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.