அகமதாபாத் மைதானத்தில் வரலாற்று சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்

அகமதாபாத்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அகமதாபாத் மைதானத்தில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன் (243 ரன்கள்) இதுவாகும். இதற்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 234 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முந்தியுள்ள பஞ்சாப் கிங்ஸ் புதிய வரலாறு படைத்துள்ளது.

இதையடுத்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.