சென்னை: ஒரே நாளில் 7 செயின் பறிப்புச் சம்பவங்கள்; ஒருவர் என்கவுன்டர்; மூவர் கைது; என்ன நடந்தது?

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவைச் சுமார் ஒரு மணி நேரத்தில் நடந்துள்ளன.

இவற்றில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன்‌ சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜாஃபர், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் சென்னை தரமணியில் வைத்திருப்பதாக விசாரணையில் கூறியுள்ளார்.

தப்பிக்க முயல…

தப்பிக்க முயல…

அந்த நகைகளை மீட்க, போலீசார் ஜாஃபரை அழைத்துச் சென்றபோது, தரமணி ரயில் நிலையம் அருகே, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஜாஃபர் முயன்றுள்ளார்.

அவரைப் பிடிக்க, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஜாஃபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து ஜாஃபரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜாஃபரின் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மூன்று பேர்

சம்பவத்தில் ஈடுபட்ட இன்னொரு நபரான சல்மான் ரயிலில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

அவரை, நேற்று மாலை நெல்லூர் அருகே மடக்கிப் பிடித்த போலீசார், தற்போது அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இதுவரைப் பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.