2026-ல் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி: இபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை

சென்னை: டெல்​லி சென்​ற அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி, மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை நேற்​று சந்​தித்​துப்​ பேசி​னார்​. இதையடுத்​து, அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, 2026-ல்​ தமிழகத்​தில்​ தேசி​ய ஜனநாயக கூட்​ட​ணி ஆட்​சி அமை​யும்​ என்​று பதி​விட்​டுள்​ளார்​.

அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி நேற்​று சென்​னை​யில்​ இருந்​து வி​மானம்​ மூலம் டெல்​லி சென்​றார்​. கடந்​த மாதம் சென்​னை​யில்​ இருந்​து காணொலி வாயி​லாக டெல்​லி​யில்​ திறந்​து​வைத்​த அதி​முக அலு​வல​கத்​தை அவர்​ பார்​வை​யிட்​டார்​. அப்​போது, மாநிலங்​களவை உறுப்​பினர்​கள்​ சி.​வி.சண்​முகம்​, மு.தம்​பிதுரை ஆகியோர்​ உடனிருந்​தனர்​. சட்​டப்​பேர​வை கூட்​டத்​ தொடர்​ நடை​பெற்​று வரும்​ நிலை​யில்​, பழனி​சாமி டெல்​லி சென்​றிருப்​பது குறித்​து
நேற்​று பேர​வை​யில்​ பேசி​ய முதல்​வர்​ மு.க.ஸ்​டா​லின்​, `எதிர்க்​கட்​சி தலை​வர்​ யாரைச்​ சந்​திக்​க டெல்​லி சென்​றுள்​ளார்​ என்​ற செய்​தி வந்​துள்​ளது’ என்​று தெரி​வித்​தது அரசி​யல்​ வட்​டாரத்​தில்​ பெரும்​ பரபரப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

பாஜக​வுடன்​ கூட்​ட​ணி இல்​லை என்​ப​தில்​ உறு​தி​யாக இருந்​த பழனி​சாமி, கடந்​த மக்​கள​வைத்​ தேர்​தலை பாஜக இல்​லாமல்​ சந்​தித்​தார்​. அந்​த தேர்​தலில்​ அதி​முக கூட்​ட​ணி அனைத்​து இடங்​களி​லும்​ தோல்​வி அடைந்​தது. ஆனால்​, தேர்​தலுக்​கு முன்​பே அதி​முக​வின்​ 2-ம்​ கட்​டத்​ தலை​வர்​கள்​ பாஜக​வுடன்​ கூட்​ட​ணி சேர தொடர்ந்​து விருப்​பம்​ தெரி​வித்​திருந்​தனர்​.

தேர்​தல்​ முடிவுக்​கு பின்​னர், `தேர்​தலில்​ பாஜக​வுடன்​ கூட்​ட​ணி வைத்​திருந்​தால்​, கணிச​மான இடங்​களைப்​ பெற்​று இருக்​கலாம்​’ என்​று அவர்​கள்​ தெரி​வித்​
தனர்​. தமிழகத்​தில்​ சட்​டப்​பேர​வைத்​ தேர்​தல்​ அடுத்​த ஆண்​டு நடை​பெற உள்​ள​தால்​, வலு​வான கூட்​ட​ணி​யை அமைக்​க பழனி​சாமி திட்​ட​மிட்​டுள்​ளார்​.

பாஜக​வின்​ தேசி​ய மற்​றும்​ மாநிலத்​ தலை​மை​யும்​ அதி​முக​வுடன்​ கூட்​ட​ணி வைக்​க தீவிர முயற்​சிகளை மேற்​கொண்​டு வரு​கிறது. அதே​நேரம்​, அதி​முக​வின்​ 2-ம்​ கட்​டத்​ தலை​வர்​கள்​, பாஜக உள்​ளிட்​ட கட்​சிகளை இணைத்​து கூட்​ட​ணி அமைக்​கலாம்​ என்​று பழனி​சாமி​யிடம்​ தெரி​வித்​து வரு​கின்​றனர்​. அதனால்​ மீண்​டும்​ அதி​முக – பாஜக கூட்​ட​ணி உறு​தி​யாகி​விடும்​ என்​று கூறப்​படு​கிறது.

இதற்​கிடை​யில்​, நேற்​று சட்​டப்​பேர​வைக்​ கூட்​டத்​தொடர்​ முடிந்​ததும்​, அதி​முக முன்​னாள்​ அமைச்​சர்​கள்​ எஸ்​.பி.வேலுமணி, கே.பி.​முனு​சாமி ஆகியோர்​ சென்​னை​யில்​ இருந்​து வி​மானம்​ மூலம்​ டெல்​லி சென்​றனர்​.

இந்​நிலை​யில்​, நேற்​று இரவு திடீரென மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை அவரது இல்​லத்​தில்​ அதி​முக பொதுச் செய​லா​ளர்​ பழனி​சாமி உள்ளிட்டோர் சந்​தித்​துப்​ பேசி​னர்.

அப்​போது, தமிழகத்​தின்​ அரசி​யல்​ நில​வரம்​, கூட்டணி மற்​றும் சட்​டம்​-ஒழுங்​கு பிரச்​சினை உள்​ளிட்​ட​வை தொடர்​பாக அவர்கள்​ பேசி​யிருக்​கலாம்​ என்​று தெரி​கிறது. இந்​த சந்​திப்​பைத்​ தொடர்ந்​து அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்​று குறிப்​பிட்டுள்​ளார்​.

ஜி.கே.​வாசன்​ சந்​திப்​பு: முன்​ன​தாக, தமிழ்​ மாநில காங்​கிரஸ்​ கட்​சித்​ தலை​வர்​ ஜி.கே.​வாசன்​ நேற்​று ​காலை மத்​திய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை ​நா​டாளு​மன்​ற அலு​வல​கத்​தில்​ மரி​யாதை நிமித்த​மாக சந்​தித்​துப்​ பேசியது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.