சென்னை: மதுரை உசிலம்பட்டியில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் காவலர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து, சட்டப்பேரவையில் பேச முயற்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்ல்ஏக்கள் அவையில் இருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டனர். இந்தநிலையில், உசிலம்பட்டி காவலர் கொலை:, மக்கள் பிரச்சினை குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பதாக, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன […]
