`மாநில அரசுகளுக்கு அதிகாரம் டு கையாலாகாத திமுக அரசுக்கு கண்டனம்’- தவெக பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள்

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஓராண்டு கடந்திருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவர் விஜய்.

இந்நிலையில் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் திருவான்மியூரில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களை கீழே காணலாம்.

தவெக விஜய்

தவெக பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள்

  • இருமொழி கொள்கையில் உறுதி

  • பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது

  • சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.

  • டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

  • மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின். பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.

  • நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.

  • மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்

  • சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான கையாலாகாத தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.

  • பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.

  • இலங்கைத் தமிழர் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்.

  • தேர்தல் கூட்டணி நிலைப்பாடு – தலைவருக்கே முழு அதிகாரம்.

  • புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • கட்சிகாக உழைத்து மறைந்த கழக தொண்டர்களுக்கு இரங்கல்.

பரணி பாலாஜி
  • சட்ட ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான திமுக அரசுக்கு கண்டனம். மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  • பன்னாட்டு அரங்குக்கு தந்தை பெரியாரின் பெயர் சூட்ட வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.