மேய்க்கால் புறம்போக்கு இடங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: மாநகரப் பகு​தி​களில் உள்ள மேய்க்​கால் புறம்​போக்கு இடங்​களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். சட்​டப்​பேர​வை​யில் நேற்று இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்​தில் காங்​கிரஸ் எம்​எல்ஏ அசன் மவுலானா (வேளச்​சேரி) பேசும்​போது, “சென்னை மற்​றும் சுற்றுப்​புற பகு​தி​களில் உள்ள சில இடங்​கள், மேய்க்​கால் புறம்​போக்கு நிலங்​களாக வரையறை செய்​யப்​படு​வ​தால், அவற்​றுக்கு பட்டாக்​கள் பெறு​வ​தில் சிக்​கல்​கள் ஏற்​படு​கின்​றன.

இந்த விவ​காரத்​தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார். அதற்கு பதிலளித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசும்​போது, “சென்​னையை சுற்​றி​யுள்ள காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் ஆகிய மாவட்​டங்​களின் எல்​லைப் பகு​தி​களில் இந்த பட்டா பிரச்​சினை​கள் நில​வு​கின்​றன. இதி​லுள்ள சிக்​கல்​களை சரிசெய்​து, அனை​வருக்​கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று தெரி​வித்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.