பெங்களூரு,
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பங்கேற்ற 13 அணிகள் தங்களுக்குள் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியது. 3 முதல் 6-வது இடங்களை பெற்ற பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஜாம்ஷெட்பூர் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி. ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் பெங்களூருவில் இன்று நடக்கும் முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை, முன்னாள் சாம்பியன் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதியில் கோவாவை சந்திக்கும்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.