சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துக் கழக மோசடி வழக்குகளை சேர்த்து விசாரிக்கக்கூடாது, தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஏராளமான ஊழல் செய்ததாக, அவர்மீது திமுக தரப்பில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. அத்துடன், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளில் […]
