காபூல்,
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மித அளவிலான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 163 பேர் பலியாகி உள்ளனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளனர். இந்நிலையில், மியான்மரில் நேற்றிரவு 11.56 மணியளவில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி இருந்தது.