பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றார் பிரதமர் மோடி – ஹைலைட் என்ன?

நாக்பூர்: ம​கா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் அமைந்​துள்ள ராஷ்டிரிய ஸ்வ​யம்​சேவக் சங்​கத்​தின் (ஆர்​எஸ்​எஸ்) தலை​மையகத்​துக்கு பிரதமர் மோடி நேற்று முதன்​முறை​யாக சென்​றார். பிரதமர் நரேந்​திர மோடி நேற்று நாக்​பூருக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். மோடி பிரத​மராக பதவி​யேற்று 11 ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் ​முறை​யாக நாக்​பூரில் உள்ள ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​துக்கு நேற்று சென்​றார். அப்​போது, ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் பிரதமரை அன்​புடன் வரவேற்​றார்.

பின்​னர் ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​தில் ஸ்மிருதி மந்​திரில் உள்ள அந்த அமைப்​பின் நிறு​வனர் ஹெட்​கேவர் நினை​விடத்​துக்​குச் சென்று அஞ்​சலி செலுத்​தி​னார். அப்​போது, இந்​தி​யா​வின் அழி​யாத கலாச்​சா​ரத்​தின் ஆலமரம் இந்த ஆர்​எஸ்​எஸ் சங்​கம் என்று கூறி​னார்.

முன்பு அடல் பிஹாரி வாஜ்​பாய் 3-வது முறை​யாக பிரதமர் பதவி வகித்​த​போது கடந்த 2000-ம் ஆண்​டில் ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​துக்கு வருகை தந்​தார். அதேபோன்று தற்​போது பிரதமர் மோடி​யும் மூன்​றாவது முறை​யாக பதவி​யேற்​றதற்கு பிறகே நேற்று இங்கு வருகை தந்​துள்​ள​தாக அந்த சங்​கத்​தின் நிர்​வாகி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

ஸ்மிருதி மந்​திரில் அமைந்​துள்ள ஆர்​எஸ்​எஸ் நிறு​வனர் கேசவ் பலி​ராம் ஹெட்​கேவர் மற்​றும் எம்​.எஸ். கோல்​வால்​கர் நினை​விடங்​களுக்​கும் சென்று பிரதமர் மோடி மரி​யாதை செலுத்​தினார். அப்போது ஆர்​எஸ்​எஸ் தலைவர் மோகன் பாகவத் உடனிருந்​தார்.

‘‘ஹெட்​கேவர் மற்​றும் கோல்​வால்​கர் ஆகிய இரு​வரின் நினை​விடம் லட்​சக்​கணக்​கான சுயம்​சேவக் தொண்​டர்​களுக்கு உத்​தவேகம் அளிக்​கும் இடமாக உள்​ளது. அவர்​கள் நாட்​டின் நலனுக்​காக தங்​களை அர்ப்​பணித்​துக் கொண்டு மக்​களுக்கு சேவை​யாற்றினர்’’ என்று பிரதமர் மோடி கூறி​னார்.

அம்​பேத்​கர் காட்​டிய வழி​யில் மோடி அரசு: மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் உள்ள தீக்ஷா பூமிக்கு நேற்று பயணம் மேற்​கொண்ட பிரதமர் மோடி அங்கு பி.ஆர். அம்​பேத்​கருக்கு அஞ்​சலி செலுத்​தி​னார்.

பின்னர், அவர் கூறிய​தாவது: சமூக நீதி மற்​றும் ஒடுக்​கப்​பட்ட மக்​களுக்கு அதி​காரமளிக்​கும் சின்​ன​மாக நாக்​பூரில் உள்ள தீக்ஷா பூமி உயர்ந்து நிற்​கிறது. நாம் கண்​ணி​யத்​துட​னும், சமத்​து​வத்​துடனும் வாழ்​வதை உறுதி செய்​யும் அரசி​யலமைப்பை வழங்​கியதற்​காக டாக்​டர் பாபா​சாகேப் அம்​பேத்​கருக்கு இந்​திய தலை​முறை​யினர் எப்​போதும் நன்​றி​யுடன் இருப்​பர்.

அவர் காட்​டிய பாதை​யில்​தான் எனது அரசு எப்​போதும் நடந்து வரு​கிறது. அம்​பேத்​கர் கனவு கண்ட இந்​தி​யாவை நனவாக்க இன்​னும் அதிக உறு​திப்​பாட்​டுடன் உழைக்க வேண்​டும். அதில் நாங்​கள் இன்​னும் தீவிர​மாக உள்​ளோம் என்​பதை வலி​யுறுத்​துகிறோம்.இவ்​வாறு பிரதமர் கூறி​னார்.

அரசமைப்பு சட்​டத்தை அழிக்க மோடி தலை​மையி​லான அரசு திட்​ட​மிட்டு செய​லாற்றி வரு​வ​தாக மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சி​யினர் தொடர்ந்து குற்​றம்​சாட்டி வரும் நிலை​யில் அம்​பேத்​கர் குறித்து பிரதமர் இவ்​வாறு கூறி​யுள்​ளது அரசி​யல் முக்​கி​யத்​து​வம்​ வாய்ந்​த நிகழ்​வாக பார்​க்​கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.