புதுக்கோட்டையில் மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் இந்திராணி (வயது 37).

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி தவபாலன் (வயது 12) என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் பிரிந்து வந்து தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு கடலை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சூழலில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த முருகன் என்பவரோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இரண்டாவதாகத் திருமணம் நடந்துள்ளது.

முருகன் எம்.ராசிமங்கலத்தில் மனைவியோடு தங்கியுள்ளார். இந்நிலையில், இந்த தம்பதியினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதேபோல், சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, முருகன் வீட்டிலிருந்த அரிவாளால் இந்திராணியைச் சரமாரியாகத் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளார்.

இதில், படுகாயம் அடைந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

accused

அப்போது, தடுக்கச் சென்ற இந்திராணியின் தாயார் லெட்சுமி (வயது 60) என்பவரையும் கையில் வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து அங்குச் சென்ற ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான போலீஸார் இந்திராணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் முருகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனது மனைவியைக் கணவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.