கடலோர காவல்​படை​யில் பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்பு: ஓய்​வு​பெற்ற அதி​காரி நா.சோமசுந்​தரம் தகவல்

சென்னை: இந்​திய கடலோர காவல்​படை​யில் ஆண்​கள் மட்​டுமின்றி பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் உள்ளன என்று ஓய்வு பெற்ற கடலோர காவல்​படை அதி​காரி கமாண்​டன்ட் நா.சோமசுந்​தரம் தெரி​வித்​தார். ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி பாபு, சென்னை வியாசர்​பாடி மல்​லிகைப்பூ காலனி​யில் உள்ள தனது இல்​லத்​தில் ‘கலாம் சபா’ நூல​கம் மற்​றும் வழி​காட்டி மையத்தை நடத்தி வரு​கிறார்.

வடசென்னை பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவர்​களின் பயன்​பாட்​டுக்​காக அமைக்​கப்​பட்​டுள்ள இந்த மையத்​தில், பள்ளி மாணவர்​கள் மேற்​படிப்பு வாய்ப்​பு​களை அறிந்து கொள்​ள​வும், கல்​லூரி மாணவர்​கள் வேலை வாய்ப்​பு​கள், போட்​டித் தேர்​வு​கள் பற்​றிய புரிதல்​களை பெற​வும் பல்​துறை வல்​லுநர்​கள் பங்​கேற்​கும் மாதாந்​திர கலந்​தாய்வு கூட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

அந்த வகை​யில், ‘கடலோரக் காவல்​படை​யும், வேலை​வாய்ப்​பு​களும்’ என்ற தலைப்​பில் மாணவர்​களுக்​கான வழி​காட்டி நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. ‘ஆளுமை சிற்​பி’ மாத இதழின் ஆசிரியர் மெ.​ஞான​சேகர் வரவேற்​புரை ஆற்​றி​னார்.

ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி பாபு தனது அறி​முக உரை​யில், “ராணுவத்​துக்கு துணை​யாக துணை ராணுவப் படைகளும், கடற்​படைக்கு துணை​யாக இந்​திய கடலோர காவல்​படை​யும் உள்​ளன. துணை ராணுவப் படைகள் மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் கீழும், கடலோர காவல்​படை மத்​திய பாது​காப்​புத் துறை​யின் கீழும் செயல்​படு​கின்​றன. இது இத்​துறை​யின் சிறப்​பான விஷ​யம்” என்​றார்.

நிகழ்ச்​சி​யில், ஓய்​வு​பெற்ற கடலோர காவல்​படை அதி​காரி கமாண்​டன்ட் நா.சோமசுந்​தரம் பேசி​ய​தாவது: இந்​திய கடலோர காவல்​படை கடந்த 1977-ம் ஆண்டு பிப்​.1-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. ஆரம்​பத்​தில் கடற்​படை​யிடம் இருந்து 2 கப்​பல்​களை கடன் வாங்கி தொடங்​கப்​பட்ட இப்​படை​யில் தற்​போது 150 கப்​பல்​கள் உள்​ளன. இவை தவிர, 24 டார்​னியர் ரக விமானங்​கள், 4 நவீன இலகு ரக ஹெலி​காப்​டர்​கள் மற்​றும் 17 சேட்​டக் ஹெலி​காப்​டர்​கள் உள்​ளன. 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாலுமிகள் உள்​ளனர்.

கடல் எல்​லை, கடல் வளங்​கள், கடல் சுற்​றுச்​சூழல் ஆகிய பாது​காப்பு பணி​களை கடலோர காவல்​படை மேற்​கொள்​கிறது. குறிப்​பாக, கப்​பல் மூலம் நடை​பெறும் கடத்​தலை தடுப்​பது, எண்​ணெய் கசிவு​களை தூய்​மைப்​படுத்​து​வது உள்​ளிட்ட பணி​களை செய்து வரு​கிறது. அத்​துடன், சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்​றங்​கள் ஏற்​படும்​போது கடலில் சிக்​கித் தவிக்​கும் மீனவர்​கள், அவர்​களது படகு​கள் உள்​ளிட்​ட​வற்றை மீ்ட்​கும் பணி​களை​யும் செய்து வரு​கிறது.
கடலோர காவல்​படை​யில் ஆண்​கள் மட்​டுமின்றி பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் உள்​ளன.

இப்​படை​யில் சேரும் அதி​காரி​களுக்கு ஆரம்​பத்​திலேயே ரூ.1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான ஊதி​யம் கிடைக்​கும். அத்​துடன், பணி பாது​காப்​பு, ரூ.1 கோடிக்​கான மருத்​து​வக் காப்​பீடு, கேண்​டீனில் மானிய விலை​யில் வீட்டு உபயோகப் பொருட்​கள் உள்​ளிட்ட பல்​வேறு சலுகைகள் வழங்​கப்​படு​கிறது.

கடற்​படை​யிலும் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் உள்​ளன. இந்த வாய்ப்​பு​களை இளைஞர்​கள் பயன்​படுத்​திக் கொண்​டு, தாங்​கள் முன்​னேறு​வதுடன், தங்​களை சுற்​றி​யுள்ள சமூகத்​தை​யும் முன்​னேற்ற வேண்​டும். இவ்​வாறு சோமசுந்​தரம் கூறி​னார். பின்​னர், மாணவர்​களின் பல்​வேறு கேள்வி​கள் மற்​றும் சந்​தேகங்​களுக்கு சோமசுந்​தரம் விடை அளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.