மெட்ரோ ரயில் பழைய பயண அட்​டை​யை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு

சென்னை: மெட்ரோ ரயில் பயணிகள் ஏப்.1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) மாற வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பழைய பயண அட்டையின் பயன்பாட்டை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயி​லில் டிக்​கெட் எடுப்​ப​தற்​காக கவுன்ட்​டர்களில் பயணி​கள் வரிசை​யில் நெடுநேரம் காத்​திருப்​பதை தவிர்க்க, சிஎம்​ஆர்​எல் பயண அட்டை கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்​தப்​பட்​டது. 5 ஆண்டுகள் வரை செல்​லுபடி​யாகும் இந்த அட்​டையை பயன்​படுத்​தும்​போது, 20 சதவீதம் கட்டண தள்​ளு​படி கிடைக்​கும்.

இதனிடையே, தேசிய பொது போக்​கு​வரத்து அட்​டையை (சிங்​கார சென்னை அட்​டை) மெட்ரோ ரயில் நிறு​வனம் 2023-ம் ஆண்டு ஏப்​.14-ம் தேதி அறி​முகப்​படுத்​தி​யது. இந்​நிலை​யில், எஸ்​பிஐ வழங்​கிய சிங்​கார சென்னை அட்​டைக்கு ஏப்​.1-ம் தேதி முதல் முழு​மை​யாக மாற திட்​ட​மிடப்​பட்​டது.

இதைத் தொடர்ந்​து, 41 மெட்ரோ ரயில் நிலை​யங்​களி​லும் படிப்​படி​யாக சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் பயண அட்​டைகளை ரீசார்ஜ் செய்​யும் வசதி நிறுத்​தப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, பயண அட்​டை​யில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்​களில் பயணிப்​ப​தற்​கும், மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் வாக​னம் நிறுத்​து​வதற்​கும் பயணி​கள் பயன்​படுத்தி வந்​தனர்.

இந்​நிலை​யில், மெட்ரோ ரயில் பயண அட்டை இன்​று​முதல் முழு​மை​யாக மாற இருப்​பதை கருத்​தில்​கொண்​டு, ஆலந்​தூர் உட்பட பல்​வேறு மெட்ரோ ரயில் நிலைய கவுன்ட்​டர்​களில் பயண அட்​டை​யில் உள்ள மீதித் தொகை திருப்​பித் தரு​மாறு பயணி​கள் கேட்டனர். ஆனால், பழைய அட்​டை​யில் உள்ள தொகையை பயணம் மேற்​கொண்டு கழிக்​கு​மாறு ஊழியர்​கள் பதிலளித்​தனர். இதனால், பயணி​களுக்​கும் ஊழியர்​களுக்​கும் இடையே கடுமையான வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

இதுகுறித்​து, பயணி​கள் கூறிய​தாவது: மெட்ரோ ரயில் பயண அட்​டை​யில் ரூ.2 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்து வைத்​துள்​ளோம். ஏப்​.1-ல் இருந்து சிங்​கார சென்னை அட்​டைக்கு மாற வேண்​டும் என தெரி​வித்​தனர். மெட்ரோ ரயில் பயண அட்​டையை தேவைப்​படும் போது மட்​டுமே பயன்​படுத்​துகிறோம்.

தற்​போது இந்த அட்​டை​யில் ரூ.1,000-க்​கும் மேல் மீதித் தொகை உள்​ளது. எனவே, இத்​தொகையை திருப்பி தர வேண்​டும் அல்​லது சிங்​கார சென்னை அட்​டைக்கு இத்​தொகையை ​மாற்​றம் செய்ய வேண்​டும். இல்​லா​விட்​டால், பயண அட்​டை​யில் பூஜ்ஜி​யம் என்ற நிலைக்கு வந்த பிறகு, சிங்​கார சென்​னைக்கு அட்​டைக்கு மாற்ற வேண்​டும். அது​வரை, மெட்ரோ ரயில் பயண அட்​டையை பயன்​படுத்த அனும​திக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

மேலும் 2 மாதம் செல்லுபடியாகும்: இதுகுறித்​து, மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “சிங்​கார சென்னை அட்டைக்கு மாற பயணி​களை ஊக்​கப்​படுத்​துகிறோம். இந்த பயண அட்​டை​யில் தொகை பூஜ்ஜி​யம் நிலைக்கு வந்​த​பிறகு, அவர்​களுக்கு ரீசார்ஜ் செய்​யாமல், அதற்கு பதிலாக சிங்​கார சென்னை அட்டை வழங்​கப்​படு​கிறது.

மேலும், மெட்ரோ ரயில் பயண அட்​டையை நிறுத்தி வைக்​க​வில்​லை. மாறாக, படிப்​படி​யாக மாற்ற திட்​ட​மிட்டு உள்​ளோம். எனவே, பழைய பயண அட்​டை​யில் இருந்து சிங்​கார சென்னை அட்​டைக்கு மாற, மேலும்​ 2 மாதங்​கள்​ வரை கால நீட்​டிப்​பு செய்​யப்​படும்​” என்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.