சென்னை வரும் 8 ஆம் தேதிக்கு டாஸ்மாக் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இந்த சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தமிழக உள்துறை […]
