BSNL 5G சேவை மிக விரைவில்… பலன்களை பெறும் சில நகரங்கள் இவை தான்…

இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என்னும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்  5ஜி நெட்வொர்க் பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. முக்கிய நகரங்கள்  பெரும்பாலும் 4G தளங்களாக உள்ள நிலையில், முக்கிய நகரங்களில் உள்ள 4G தளங்கள் 5G தளங்களாக மேம்படுத்தப்படும் என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவையை விரைவில் தொடங்க திட்டம்

BSNL அடுத்த மூன்று மாதங்களில் 5G சேவைகளை முறையாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல்  வலுவாக உள்ள பகுதிகளில் நெட்வொர்க் சோதனை செய்யப்படுகிறது. ஜெய்ப்பூர், லக்னோ, சண்டிகர், போபால், கொல்கத்தா, பாட்னா, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் 5ஜி டவர் சோதனைகள் தொடங்கியுள்ளன. கான்பூர், புனே, விஜயவாடா, கோயம்புத்தூர் மற்றும் கொல்லம் போன்ற நகரங்களிலும் புதிய பேஸ் டிரான்ஸ்ஸீவர் நிலையங்கள் (பிடிஎஸ்) நிறுவப்பட்டு வருவதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2025 ஜூன் மாதத்திற்குள் சுமார் ஒரு லட்சம் 4G டவர்கள் செயல்படத் தொடங்கும்

மார்ச் 7, 2025 அன்று TelecomTalk தளத்தில் வெளியான அறிக்கையில், BSNL நிறுவனத்தின் சுமார் ஒரு லட்சம் 4G கோபுரங்கள் 2025 ஜூன் மாதத்திற்குள் முழுமையாகச் செயல்படும். இந்தக் டவர்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு பின்னர் 5G ஆக மேம்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் இதை உறுதி செய்துள்ளார். இதன் மூலம், BSNL நிறுவனத்தின்  5G அறிமுகம் இப்போது சில மாதங்களில் எதிர்பார்க்கலாம்

ஏப்ரல் மாதத்தை வாடிக்கையாளர் சேவை மாதமாக அறிவித்துள்ள பிஎஸ்என்எல் 

BSNL தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், அவர்களின் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கவும், ஏப்ரல் மாதத்தை வாடிக்கையாளர் சேவை மாதமாக அறிவித்துள்ளது.  மார்ச் 31, 2025 அன்று X தளத்தில் பகிரப்பட்ட வீடியோவில், “முக்கிய செய்தி வருகிறது! இந்த வாடிக்கையாளர் சேவை மாதத்தில், உங்கள் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்குவோம். சில சிறப்பு அறிவிப்புகளுக்காக காத்திருங்கள்.’ என பிஎஸ்என்எல்  தெரிவித்தது.

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த நடவடிக்கை

BSNL நிறுவனத்தில் இந்த முயற்சி நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அதன் சேவைகளை மேம்படுத்துவதாகும். இந்த முயற்சியின் கீழ்:

1. மொபைல் நெட்வொர்க் தரம் மேம்படுத்தப்படும்.

2. ஃபைபர் பிராட்பேண்ட் (FTTH) மற்றும் குத்தகை சுற்றுகள்/MPLS ஆகியவற்றின் நம்பகத்தன்மை மேம்படுத்தப்படும்.

3. பில்லிங் முறை மிகவும் வெளிப்படையானதாக மாற்றப்படும்.

4. வாடிக்கையாளர் புகார்கள் விரைவாக தீர்க்கப்படும்.

இந்த முயற்சியின் கீழ், அனைத்து வட்டங்கள், வணிகப் பகுதிகள் மற்றும் யூனிட்கள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்று வெற்றிபெறச் செய்யும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்கிற்கு முக்கியத்துவம்

வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துக்களை பெற, இணையதளம், சமூக ஊடகங்கள், வாடிக்கையாளர் மன்றங்கள் மற்றும் நேரடி அவுட்ரீச் உள்ளிட்ட பல ஊடகங்களைப் பயன்படுத்துவதாக BSNL ஏப்ரல் மாதம் அறிவித்தது. இந்த கருத்தை பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சிஎம்டி) ராபர்ட் ஜே. ரவி மதிப்பாய்வு செய்வார்.

‘விக்சித் பாரத்’ என்ற டிஜிட்டல் இலக்கை நிறைவேற்ற முயற்சி

நிர்வாக இயக்குனர் ரவி கூறுகையில், ‘பிஎஸ்என்எல்லின் பயணம் ஒவ்வொரு வாடிக்கையாளரின் குரலோடும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு 4ஜியை அறிமுகப்படுத்தும் ஒரே தொலைத்தொடர்பு வழங்குநர் நாங்கள் மட்டுமே. ‘விக்சித் பாரத்’ என்ற டிஜிட்டல் இலக்கை நிறைவேற்ற சேவை, வேகம் மற்றும் வலிமையுடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். BSNL நிறுவனத்தின் இந்த முயற்சி, இந்தியாவை டிஜிட்டல் ரீதியில் வலுவாக மாற்றுவதற்கான ஒரு பெரிய படியாகும். அடுத்த சில மாதங்களில் பிஎஸ்என்எல்லின் 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் நாடு முழுவதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க |  BSNL-ன் அட்டகாசமான திட்டம்… 84 நாள்களுக்கு இத்தனை வசதிகளா…? விலையும் கம்மி
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.