சென்னை கிண்டி அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த டிசம்பர் 23-ந் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த முடிவு […]
