கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி ஆட்சியர் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்க்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி ஆட்சியர், ”வரும் மே மாதம் 15ஆம் தேதிக்குள் கிருஷ்ணகிரியில் 100 சதவீதம் தமிழில் அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகை அமைப்பதை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அனைத்து நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைப்பது தொடர்பான வழிமுறைகளை கடைப்பிடித்திட வேண்டும். நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே 15க்குள் தமிழில் வைத்திட […]
