விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராஜதந்திரத்தோடு அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார்.

எடப்பாடியார் என்ன செய்வார், என்ன செய்துவிட முடியும், என்ன செய்யப் போகிறார் என்று பொதுமக்களும், செய்தி சேனல்களும் எதிர்பார்த்த இந்த நேரத்தில் அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார்.
இதன்மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். அ.தி.மு.க ஆட்சிய மலரச் செய்ய முடியும் என எடப்பாடி பழனிசாமி காட்டியுள்ளார்.
பங்குனி உத்திரத்தன்று எடுக்கின்ற முடிவுகள் வெற்றிபெறும் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் வெற்றி நம் கண் முன்னே தெரிகிறது.

2026 மே மாதம் சட்டமன்ற கதாநாயகனாக முதல்வராக எடப்பாடி பழனிசாமி செல்ல இருக்கிறார். 2026-ல் வெற்றி பெற்று ஜெயின்ட்ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்குச் சிறப்புரை ஆற்றுவார்.
இந்த காட்சிகள் எல்லாம் எங்கள் கண்முன்னே வந்து செல்கின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைக்கப்பட்டுள்ள கூட்டணியைப் பார்த்து விழி பிதுங்கிப் பதறிப்போய் இருக்கிறது தி.மு.க. கூட்டம். அ.தி.மு.க. கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கிறது” எனப் பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs