உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் மாமியார் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்ராக் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு டாடன் பகுதியைச் சேர்ந்த ஒரு பையனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்திற்கு அழைப்பிதழ்கள் அச்சடித்து சொந்த பந்தங்களுக்கு விநியோகித்த நிலையில் மணமகளின் தாயும் மணமகனும் வீட்டை விட்டு ஓடிப்போயுள்ளனர். மகளுடன் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் பரிச்சயம் ஏற்பட்டு காதலாக மாறிய நிலையில் இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் […]
