“கூட்டணி ஆட்சி என்பது யதார்த்தம் தெரியாத பேச்சு!” – கொமதேக ஈஸ்வரன் சிறப்பு நேர்காணல்

அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கொங்கு மண்டலத்தில் இந்த கூட்டணி ஏற்படுத்தப் போகும் பாதிப்பு, அமித் ஷாவின் கூட்டணி ஆட்சி அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் பேசினார் கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ.

அதிமுக – பாஜக கூட்டணியை இவ்வளவு சீக்கிரம் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தீர்களா?

கடந்த 15 நாட்​களுக்கு முன்​பு, அமித் ஷாவை பார்க்க இபிஎஸ் செல்​வார் என்று மக்​கள் எதிர்​பார்க்​க​வில்​லை. அந்த சந்​திப்​புக்கு பிறகு கூட்​டணி குறித்து இபிஎஸ் எது​வும் சொல்​ல​வில்லை என்​றாலும், பேச்​சு​வார்த்தை நடப்​ப​தாக அமித் ஷா வெளிப்​படை​யாக தெரி​வித்து விட்​டார். அதன் தொடர்ச்​சி​தான் தற்​போதைய அறி​விப்​பு.

அதிமுக தலைமையை மிரட்டி, இந்தக் கூட்டணியை பாஜக அமைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே?

கடந்த காலங்​களில், “பாஜக-வுடன் கூட்​டணி இல்​லை” என்று சொன்​னார் இபிஎஸ். பிறகு, “தேர்​தல் கூட்​டணி வேறு, கொள்கை வேறு” என்​றார். அமித் ஷாவுட​னான சந்​திப்​புக்​குப் பிறகு, “6 மாதம் கழித்​துத்​தான் கூட்​டணி குறித்த முடிவு எடுக்​கப்​படும்” என்​றார். இப்​படிச் சொன்​ன​வர்​கள் தற்​போது இவ்​வளவு அவசர​மாக கூட்​ட​ணியை அறிவிக்​கி​றார்​கள் என்​றால் அதற்கு நிர்​பந்​தம் தான் காரண​மாக இருக்​கும். எனவே, முதல்​வர் சொல்​வது சரி​யானதே.

பாஜக-வுடன் திமுக மறைமுக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக நிர்பந்த கூட்டணி அமைத்துள்ளது என்கிறாரே விஜய்?

பாஜக-வுடன் திமுக கூட்​டணி என்று சொல்​வது நம்​பு​கிற மாதிரியா இருக்​கிறது? யாரோ எழு​திக் கொடுப்​பதை அவர் சொல்​கி​றார். நானும் களத்​தில் இருக்​கிறேன், நானும் ஒரு அரசி​யல் தலை​வர் என்ற அடிப்​படை​யில் இது போன்ற கருத்​துகளை தெரி​வித்து ஊடக வெளிச்​சம் பெற விஜய் முயற்​சிக்​கி​றார்.

2026-ல் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டி என்கிறாரே விஜய்..?

அதி​முக-​வினர் தவெக கூட்​ட​ணியை எதிர்​பார்த்​தார்​கள். அது நடக்​க​வில்​லை. ஒரு​வேளை, அதி​முக-வுடன் கூட்​டணி வைத்​திருந்​தால் தவெக-வுக்கு ஓர் எதிர்​காலம் இருந்​திருக்​கும். தற்​போது கூட்​டணி வேறு மாதிரி உரு​வாகி இருப்​ப​தால், தவெக-​வின் எதிர்​காலம் கேள்விக்​குறி​தான்.

அண்ணாமலையின் தலைவர் பதவியை பறிக்க, அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இபிஎஸ் காரணமாகிவிட்டாரே?

பொது​வாக தேசி​யக் கட்​சிகளைப் பொறுத்​தவரை, மாநிலத் தலை​வர்​கள் செல்​வாக்கை வளர்த்​துக் கொள்​வதை விரும்​புவ​தில்​லை. தமிழக பாஜக தலை​வ​ராக அண்​ணா​மலை இருந்​த​போது, அவர் தன்னை வளர்த்​துக் கொண்​டார். அவர் கட்​சியை வளர்த்​தார் என்று சொல்ல முடி​யாது. இப்​படி, ஒரு மாநில தலை​வர் வளர்ந்​தால் எதிர்​காலத்​தில் பிரச்​சினை​யாகும் என்​பது தேசி​யக் கட்​சிகளுக்கு தெரி​யும். அப்​படி ஒரு சூழலில் தான் இந்த மாற்​றம் நடந்​துள்​ளது. அண்​ணா​மலையை மாற்ற வேண்​டும் என அதி​முக கோரிக்கை வைத்​தது. அதையே வைத்து பாஜக அண்​ணா​மலையை வீழ்த்தி விட்​டது. இது காக்கை உட்​கார பனம் பழம் விழுந்த கதை​தான்.

கடந்த காலத்தில் அதிமுக – பாஜக கூட்டணி கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 2026-ல் இந்தக் கூட்டணியை திமுக கூட்டணி எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

கடந்த 2021 சட்​டமன்​றத் தேர்​தலை மட்​டும் கணக்​கில் வைத்து இது போன்ற கருத்து பரப்​பப்​படு​கிறது. 2019 மற்​றும் 2024-ல் யார் வெற்றி பெற்​றார்​கள் என்று பார்க்க வேண்​டும். 2021-ல் அதி​முக ஒன்​று​பட்டு இருந்​தது. முதலமைச்​ச​ராக இபிஎஸ் தேர்​தலை சந்​தித்​தார். அன்று பாமக வலு​வாக இருந்​தது. இப்​போது எப்​படி இருக்​கிறது என்று உங்​களுக்கு தெரி​யும். பாஜக தலை​வர் பதவி​யும் நெல்லை மாவட்​டத்​துக்​குச் சென்று விட்​டது. இப்​படி பல மாற்​றங்​கள் நடந்​துள்​ளன. அதோடு, ஐந்​தாண்டு கால திமுக ஆட்​சி​யில் பல்​வேறு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. பெண்​கள், அடித்​தட்டு மக்​களின் தேவை​கள் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ள​தால், திமுக கூட்​டணி தான் வெற்றி பெறும்.

தமிழகத்தில் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் என்டிஏ கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷாவின் அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்..?

இபிஎஸ் தலை​மை​யில் தேர்​தலை சந்​திப்​போம் என்று சொன்ன அமித் ஷா, இபிஎஸ் தான் முதலமைச்​சர் என்று எங்​காவது சொன்​னா​ரா? பழனி​சாமி முதல்​வ​ராக வரு​வதை பாஜக அனு​ம​திக்​காது. தேர்​தலுக்கு முன்​பாக ஒரு நிலைப்​பாடு, தேர்​தலுக்கு பின்​னால் ஒரு நிலைப்​பாடு என்​பது பாஜக-​வின் கடந்த கால வரலாறு. இதற்கு பல மாநிலங்​களை உதா​ரண​மாக கூறலாம். தேர்​தலுக்கு பின் ஒரு​வேளை அதி​முக அதிக தொகு​தி​களில் வென்​றால், எம்​எல்​ஏ-க்​களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்​க​வும் பாஜக தயங்​காது. இப்​போதே செங்​கோட்​டையன் மூலம் இபிஎஸ்​ஸுக்கு செக் வைத்த பாஜக, தேர்​தலுக்கு பின் அவரை முதல்​வ​ராக ஏற்​பார்​கள் என்று எப்​படி நம்ப முடி​யும்?

தமிழக அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்ட அமித் ஷா, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் இதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்கிறாரே..?

கடந்த 2016-ல் அதி​முக பொதுச்​செய​லா​ளர் ஜெயலலிதா மீது இல்​லாத குற்​றச்​சாட்​டா? குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டு, சிறை சென்று வந்த ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்​டும் முதல்​வர் பதவி​யில் அமர​வில்​லை​யா? எனவே, அரசி​யல் ரீதி​யான இத்​தகைய குற்​றச்​சாட்​டு​களை பொருட்​படுத்த தேவை​யில்​லை.

திமுக-விடம் ஆட்சியில் பங்கு கேட்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கூடுதல் தொகுதிகளையாவது கேட்க வாய்ப்புள்ளதா?

கூட்​டணி ஆட்சி என்​பது யதார்த்​தம் தெரி​யாமல் பேசுவது தான். தமி​ழ​கத்​தில் ஒரு திரா​விட கட்சி பலவீன​மா​னால் மட்​டும் தான் கூட்​டணி ஆட்சி என்ற பேச்சு எழும். தற்​போது அதி​முக பலவீனம் ஆகி​விட்​டது என்​ப​தால், கூட்​டணி ஆட்சி என்ற அறி​விப்பு வரு​கிறது. நாம் பலவீன​மாகி​விட்​டோம் என்​பதை அதி​முக-​வும் உணர்ந்து விட்​டது. தொகு​தி​கள் எண்​ணிக்கை எல்​லாம் தேர்​தல் நேரத்​தில் பேச வேண்​டியது.

அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க பேச்சையும் அவர் மீது முதல்வர் எடுத்த நடவடிக்கையையும் எப்படி பார்க்கிறீர்கள்?

பொன்​முடி போன்ற மூத்த அமைச்​சர்​கள் இது​போன்று பேசுவது ஏற்​புடையதல்ல. இதனை கொமதேக ஏற்​கெனவே கண்​டித்​துள்​ளது. இந்த விஷ​யத்​தில் முதல்​வரின் நடவடிக்கை வரவேற்​கக் கூடியதே.

திமுக கரை வேட்டி கட்டியவர்கள், நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளக்கூடாது, கைகளில் கயிறு கட்டிக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் திமுக எம்பி-யான ஆ.ராசாவும் கூறி வருகிறாரே..?

2021 தேர்தலுக்கு முன்பாக ஆ.ராசா பேசிய கருத்துகள் தவறாக இருந்ததால், நான் கண்டித்துள்ளேன். இது போன்ற தேவையில்லாத பேச்சுகளை தவிர்க்க வேண்டும். இது போன்ற கருத்துகள் மக்கள் மத்தியில் பரவும்போது, திமுக மீது இருக்கும் நம்பிக்கை குறையும். இது போன்ற அவதூறு பேச்சுகளை தடுக்க, முதல்வர் ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக முதல்வரின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதில் தோற்றது யார்?

டெல்​லி​யில் இருந்து ஆளுநரை ஆட்​டு​வித்​தனர். அதன்​படி அவர் செயல்​பட்​டார். எனவே, இந்த சட்​டப் போராட்​டத்​தில் பாஜக தான் தோற்​றுள்​ளது. தோல்வி ஆளுநருக்கு அல்ல; பாஜக-வுக்​குத்​தான்.

மக்களவையில் வக்பு வாரிய மசோதா தாக்கலான போது, அதனை எதிர்த்து கொமதேக எம்பி வாக்களிக்காமல் வெளியேறியது சர்ச்சையானதே..?

இது தொடர்​பாக எம்​பி-​யான மாதேஸ்​வரன் என்​னிடம் விளக்​கம் அளித்​துள்​ளார். அன்று இரவு 8 மணி வரை மக்​களவை​யில் இருந்த அவர், உடல்​நிலை சரி​யில்​லாத​தால் மருத்​து​வ​மனைக்​குச் செல்ல வேண்டி இருந்​தது. அதனால் வாக்​கெடுப்​பில் பங்​கெடுக்க முடிய​வில்​லை.

பிரதமர் விழாவில் பங்கேற்காமல், வள்ளி கும்மி நடனம் பார்க்க முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்ததாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளாரே?

பிரதமர் நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஏன் கலந்து கொள்​ள​வில்லை என்​ப​தற்​கான காரணத்தை அவர்​கள் தான் சொல்ல வேண்​டும். ஆனால், வள்​ளி கும்மி நிகழ்ச்​சி​யை, ‘மா​னாட மயி​லாட’ நிகழ்ச்​சி​யைப் போல், எண்​ணிக் கொண்டு மத்​திய அமைச்​சர் முரு​கன் கொச்​சைப்​படுத்தி பேசி​யுள்​ளார். 10 ஆயிரம் பெண்​கள் ஒன்​றிணைந்து கோவை​யில் வள்​ளி கும்மி நிகழ்ச்​சியை நடத்​தினர். அதோடு, 16 ஆயிரம் பெண்​கள் வள்​ளி ​கும்மி ஆடி, கின்​னஸ் சாதனை படைத்​துள்​ளனர். அவர்​களின் உணர்​வு​களை மதித்து முதல்​வர் ஸ்டா​லின் அந்​நிகழ்​வில் பங்​கேற்று சான்​றிதழ்​களை வழங்​கி​னார்.

இதற்காக எல்.முருகன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளீர்களே..?

வள்​ளி​ கும்மி என்​பது முரு​கனை வாழ்த்​திப் பாடு​வது​தான். பெயரில் முரு​கனை வைத்​துக் கொண்​டு, வேல் யாத்​திரை நடத்​திய எல்​.​முரு​கன், வள்​ளி​ கும்மி நடனத்தை வேறு ஏதோ நடனத்​துக்கு இணை​யாக ஒப்​பிட்​டுப் பேசி​யதை ஏற்க முடி​யாது. ஆகவே, கொங்கு நாட்டு மக்​கள் மத்​தி​யில் மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன் கட்​டா​யம் மன்​னிப்​புக் கேட்​கத்​தான் வேண்​டும்.

வள்ளி கும்மி நடனம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வருகின்றனவே..?

இந்த நிகழ்ச்சி மூலம் கொங்கு மண்​டலத்​தில் பெண்​கள் ஒற்​றுமைப்​படு​கி​றார்​கள். அந்த ஆதங்​கத்​தில், இது சாதி ரீதி​யாக நடப்​ப​தாக அவதூறு பரப்​பு​கின்​ற​னர். யாரோ சிலர் யூடியூபில் பேசி​னால் அது உண்மை ஆகாது. வள்ளி கும்மி ஒற்​றுமையை ஏற்​படுத்​துமே தவிர, பிரி​வினையை ஏற்​படுத்​தாது.

தமிழக ஜிடிபி-யில் கொங்கு மண்டலம் அதிகம் பங்கு வகிக்கிறது. கொங்கு மண்டலத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதில் தமிழக அரசு போதுமான முக்கியத்துவம் கொடுக்கிறதா?

கொங்கு மண்​டலத்​திற்கு தேவைப்​படும் பல்​வேறு திட்​டங்​களை முதல்​வ​ரும், அமைச்​சர்​களும் செய்து வரு​கி​றார்​கள். அதிக நிதி தேவைப்​படும் நீர்ப்​பாசன திட்​டங்​களை நிறை​வேற்​று​வ​தில் தான் தாமதம் ஏற்​படு​கிறது.

கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற உங்களது நீண்ட நாள் கோரிக்கை அப்படியே இருக்கிறதே?

தமிழக முழு​வதும் எட்டு மாவட்​டங்​களை பிரிக்க வேண்​டும் என்று கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே பிரிக்​கப்​பட்ட மாவட்​டங்​களே, போது​மான நிதி ஒதுக்​கீடு இல்​லாத​தால், தடு​மாறிக் கொண்டு இருக்​கின்​றன. ஆனாலும், கோவை, ஈரோடு, சேலம் மாவட்​டங்​களை பிரிக்க வேண்​டும் என்ற எங்​கள் கோரிக்​கை​யை, தேவையை முதல்​வர் உணர்​ந்​துள்​ளார். நிதி பற்​றாக்​குறை​யால் தாமதம் ஆகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.