​திமுகவுடன் பாஜக மறைமுக கூட்டணி என விஜய் சொல்வதை பொருட்படுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் கருத்து

சென்னை: திமுக​வுடன் பாஜக மறை​முக கூட்​டணி என்று விஜய் பொத்​தாம் பொது​வாக கூறு​வதை பொருட்​படுத்த தேவை​யில்லை என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் தூத்​துக்​குடி புறப்​பட்டுச் சென்​றார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நான் பாஜக மாநில தலை​வ​ராக புதி​தாக பொறுப்​பேற்​றாலும், கட்சி தொண்​டர்​களு​டன் கடந்த 9 ஆண்​டு​களாக பழகி வரு​கிறேன். அவர்​கள் சுயநலம் இல்​லாமல், தேசம், தாய் நாடு, தாய்​மொழி பற்று உடைய​வர்​கள்.

‘பாஜக – அதி​முக கூட்​டணி அமைந்​து​விட்​ட​தால், திமுக​வின் வெற்றி உறு​தி’ என்​பது​போல அவர்​கள் தரப்​பில் கூறிக்​கொள்​ளலாம். ஆனால், அதை தீர்​மானிக்க வேண்​டியது எஜமானர்​களான வாக்​காளர்​கள்​தான். பாஜக​வுடன் சேர்ந்​த​தால்​தான் திமுக கடந்த 1999-ல் வெற்றி பெற்​றது. அதை யாரும் மறக்க கூடாது.

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஓரம்​கட்​டப்​பட​வில்​லை. பழனி​சாமியை சந்​தித்து பேசவே மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, சென்னை வந்​தார். எனவே​தான் மற்ற தலை​வர்​களை அழைக்​க​வில்​லை. திமுக​வுடன் பாஜக மறை​முக கூட்​டணி என்​கிறார் தவெக தலை​வர் விஜய். எதை வைத்து இப்​படி கூறுகிறார் ஒரு பொறுப்​பில் உள்​ளவர் ஒரு விஷ​யத்தை சொன்​னால், மக்​கள் நம்​பும் படி இருந்​தால்​தான் அதை ஏற்​றுக்​கொள்ள முடி​யும். எனவே, பொத்​தாம் பொது​வாக கூறும் இந்த கருத்தை பொருட்​படுத்த தேவை​யில்​லை.

“அதி​முக – பாஜக கூட்​ட​ணி​யில் விஜய்​யின் தவெக சேர்க்​கப்​படு​மா” என்று கேட்​கிறீர்​கள். இதுகுறித்து பாஜக தேசிய தலை​மை​தான் முடிவு செய்ய வேண்​டும். சட்​டப்​பேர​வை​யில் அதி​முக, திமுக, பாஜக உறுப்​பினர்​கள் ஒன்​றாக பேசிக்​கொள்​வோம். ஆனாலும் அவர்​கள் கொள்கை வேறு, எங்​கள்​ கொள்​கை வேறு.இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

பயம் தெரிகிறது: இதனிடையே, நயி​னார் நாகேந்​திரன் தனது எக்ஸ் தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: நம்​மைப் பார்த்து ‘பொருந்தா கூட்​ட​ணி’ என்​கிறார்​களாம் சில திமுக ஏஜென்ட்​கள். ஆம், இது திமுக​வுக்கு பொருந்தா கூட்​ட​ணி​தான். ஏனென்​றால், மக்​களை சுரண்டி கொழுக்​கும் முதல்​வர் ஸ்டா​லினின் அவல ஆட்​சியை இந்த கூட்​ட​ணி​தான் வீட்​டுக்கு அனுப்​பப்​போகிறது. தமிழக பெண்​களின் மாண்பை கழு​வில் ஏற்​றிய கயவர்​களை அமைச்​சர்​களாக கொண்ட கேடு​கெட்ட ஆட்​சியை இந்த கூட்​ட​ணி​தான் வேரறுக்​கப் போகிறது. இந்த கூட்​ட​ணி​தான் மக்​களோடு மக்​களாக நின்று உங்​கள் கூடாரத்​தையே விரட்​டியடிக்க போகிறது. இந்த உண்மை உங்​களுக்​கும் தெரிந்​திருப்​ப​தால் கண்​ணில் மரண பயம் தெரி​கிறது​போலும். பதற்​றம் வேண்​டாம் முதல்​வரே. இன்​னும் ஓராண்டு காலம் இருக்​கிறது. அது​வரை ஆடுங்​கள். ஆனால், மக்​கள் வாயி​லாக மகேசன் உங்​களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பை யா​ராலும் மாற்ற முடி​யாது. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.