நயி​னார் நாகேந்​திரன் வேண்டுகோளை ஏற்று ​மீண்டும் காலணி அணிந்த அண்ணாமலை

சென்னை: கடந்த 2024 டிசம்​பரில், அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வன்​கொடுமை தொடர்​பான முதல் தகவல் அறிக்கை (எஃப்​ஐஆர்), பொது வெளி​யில் வெளி​யானது.

அப்​போது, கோவை​யில் டிசம்​பர் 26-ம் தேதி செய்​தி​யாளர்​களை சந்​தித்​த​ அண்​ணா​மலை ‘‘தி​முக ஆட்​சியை அகற்​றும் வரை காலணி அணிய மாட்​டேன்’’ என்று சபதம் எடுத்​துக்​கொண்​டார். இந்​நிலை​யில், தமிழக பாஜக தலை​வ​ராக நேற்று பொறுப்​பேற்ற நயி​னார் நாகேந்​திரன் விழாமேடை​யில், ‘‘திமுக ஆட்​சியை அகற்​றும் வரை காலணி அணிய மாட்​டேன் என்று அண்​ணா​மலைசபதம் ஏற்​றார். ஆட்சி மாற்றத்​துக்​காக அமித் ஷா நேற்றே அடிக்​கல் நாட்​டி​விட்​டார். அதனால், அண்ணா​மலை மீண்​டும் காலணி அணிந்​து​கொள்ள வேண்​டும்’’ என்று வேண்​டு​கோள் விடுத்​து, புதி​தாக வாங்கி வந்த காலணியை அண்​ணா​மலை​யிடம் கொடுத்​தார். ‘‘வய​தில் மூத்​தவ​ரான பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விடுத்த வேண்​டு​கோளை ஏற்​றுக் கொள்​கிறேன்’’ என்று கூறி, காலணி​யை அணிந்​து​ கொண்​டார்​ அண்​ணாமலை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.