இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025

Live Updates

  • 14 April 2025 5:06 PM IST

    விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

    • Whatsapp Share

  • 14 April 2025 4:57 PM IST

    பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், டாக்டர் ராமதாஸின் முடிவை விமர்சித்த திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும். திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றி திலகபாமாவிற்கு ஒன்றும் தெரியாது.

    கட்சியை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி திலகபாமா. போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என எதிலும் கலந்து கொள்ளாதவர் அவர் என தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp Share

  • 14 April 2025 4:26 PM IST

    சென்னை பரங்கிமலை பகுதியில் அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வு போலீசார் மேற்கொண்ட சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான 2 கிலோ கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • Whatsapp Share

  • 14 April 2025 3:52 PM IST

    குஜராத்தில் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து கடந்த 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களில் சர்வதேச கடல் எல்லை கோட்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்டது.

    இதில், 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும்.

    • Whatsapp Share

  • 14 April 2025 2:40 PM IST

    சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக, 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

    • Whatsapp Share

  • 14 April 2025 1:06 PM IST

    • சென்னை சாலிகிராமத்தில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவர் படுகாயம்.
    • முகம் மற்றும் மணிக்கட்டில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பத் தனியார் மருத்துவமனையில் அனுமதி.
    • விசாரணையில் 16 வயது சிறுவன் பைக்கை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது
    • சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை

    • Whatsapp Share

  • 14 April 2025 12:43 PM IST

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    • Whatsapp Share

  • 14 April 2025 10:47 AM IST

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழாவையொட்டி தைலாபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக தலைவர் ராமதாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    • Whatsapp Share

  • 14 April 2025 10:45 AM IST

    அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழாவையொட்டி சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • Whatsapp Share


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.