தமிழ் புத்தாண்டு புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ் புத்​தாண்டு புதிய எழுச்​சி​யை​யும், மகிழ்ச்​சி​யை​யும் வழங்​கும் ஆண்​டாக அமையட்​டும் என தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: தமிழ்ப் புத்​தாண்​டு, பெரு​மைமிக்க பண்​டைய, வளமான தமிழ் கலாச்​சா​ரம் மற்​றும் பாரம்​பரி​யத்​தின் நம்​பிக்​கைக்​குரிய எதிர்​காலத்​தின் கொண்​டாட்​ட​மாகும். இந்த புத்​தாண்டு அனை​வருக்​கும் வளம், நல்ல ஆரோக்​கி​யம், புதுப்​பிக்​கப்​பட்ட ஆற்​றல் மற்​றும் ஏராள​மான வாய்ப்​பு​களை கொண்​டு​வரட்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: புதிய தமிழ் ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கும் ஒவ்​வொரு தமிழரின் உள்​ளத்​தி​லும் புதிய சிந்​தனை​கள், புதிய முயற்​சிகள், புதிய நம்​பிக்​கைகளோடு கூடிய புதிய உத்​வேகம் பிறக்​கட்​டும். வழிமறிக்​கும் தடைகளை தகர்த்து புதிய வெற்​றிகளை பெற்று வளமான தமிழகத்தை படைத்​திடு​வோம்.

மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: தமிழ் புத்​தாண்டு மலரும் இந்​நன்​னாளில் அனைத்து மக்​களுக்​கும் அன்​பை​யும், நிறைந்த ஆரோக்​கி​யத்​தை​யும், மிகுந்த மகிழ்ச்​சி​யை​யும், வெற்​றிகளை​யும் வாரி வழங்​கும் ஆண்​டாக அமைய இறைவனிடம் வேண்​டிக்​கொள்​கிறேன். உலகெங்​கும் வாழும் தமிழ் சொந்​தங்​கள் அனை​வருக்​கும் தமிழ் புத்​தாண்டு நல்​வாழ்த்​துகள்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: தமிழர்​களின் கலாச்​சா​ரத்தை பாது​காக்க வழி ஏற்​படுத்​த​வும், அனை​வரது வாழ்​வும் ஏற்​றம் பெற​வும் தமிழ் புத்​தாண்டு உதவட்​டும். அனை​வருக்​கும் இனிய தமிழ் புத்​தாண்டு நல்​வாழ்த்​துகள்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: மக்​களுக்கு வாழ்​வில் புதிய எழுச்​சி​யை​யும், மகிழ்ச்​சி​யை​யும், மாநில வளர்ச்​சி​யை​யும் வழங்​கும் ஆண்​டாக இப்​புத்​தாண்டு மலரட்​டும். புதி​தாக மலரும் இந்த ஆண்​டில் செல்​வத் திரு​மகள் பீட​மான தாமரை, மலர்ச்​சியை நம் தமிழகத்​தில் உறுதி செய்​யப்​போகிறது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: தமிழர்​கள் வாழ்​வில் நீங்​காத இடம் பிடித்​திருக்​கும் சித்​திரை திரு​நாளை உலகெங்​கும் கொண்​டாடும் தமிழக மக்​கள் அனை​வருக்​கும் எனது இதயம் கனிந்த நல்​வாழ்த்​துகளை தெரி​வித்​துக்​கொள்​கிறேன்.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: தமிழ் புத்​தாண்​டில் தமிழர்​கள் அனை​வரது வாழ்​விலும் அன்பு மேலோங்கி அமைதி நில​வட்​டும். இன்​ப​மும், இனிமை​யும் இல்​லந்​தோறும் பொங்​கட்​டும் என வாழ்த்​துகிறேன்.

பாமக தலை​வர் அன்​புமணி: இந்​திர விழாவை நமக்கு கொண்டு வரும் சித்​திரை திரு​நாளை கொண்​டாடி மகிழும் தமிழக மக்​கள் அனை​வருக்​கும் எனது நெஞ்​சம் நிறைந்த வாழ்த்​துகள்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: இலைகளை​யும், மொட்​டு​களை​யும், பூக்​களை​யும், காய்​களை​யும், கனிகளை​யும் தந்து இயற்​கைத் தாய் நம்மை களிப்​படையச் செய்​யும் காலம் மலரும் சித்​திரையை மகிழ்​வோடு கொண்​டாடி மகிழ்​வோம்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: வசந்​த​காலத்​தின் தொடக்​க​மாக​வும், உலகெங்​கும் வாழும் தமிழர்​கள் கொண்​டாடும் சித்​திரை மாதம் நமக்கு வசந்​த​கால​மாக அமையட்​டும். அனை​வருக்​கும் தமிழ் புத்​தாண்டு நல்​வாழ்த்​துகள்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தமிழ் புத்​தாண்டை மகிழ்ச்​சி​யோடும், உற்​சாகத்​தோடும் கொண்​டாடி மகிழும் தமிழக மக்​கள் அனை​வருக்​கும் எனது இனிய நல்​வாழ்த்​துகள்.

ஐஜேகே தலை​வர் ரவி பச்​ச​முத்​து: தமிழ் புத்​தாண்​டில் தமிழரின் பாரம்​பரிய​மும், பண்​பாடும் அனை​வரிட​மும் மலர்ந்து நலம் தழைக்​கட்​டும்.

முன்​னாள் எம்​.பி. சரத்​கு​மார்: இனிய சித்​திரை புத்​தாண்​டில் மக்​கள் வாழ்​வில் வளம்​பெருக வாழ்த்​தி, உலகமெங்​கும் வாழும் தமிழ் மக்​களுக்கு இனிய தமிழ் புத்​தாண்டு நல்​வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இவர்​களு​டன் கொங்​கு​நாடு மக்​கள் தேசிய கட்சி பொதுச்​செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், முன்​னாள் எம்​.பி. சு.​திரு​நாவுக்​கரசர், கோகுல மக்​கள் கட்​சி​யின் நிறு​வனர் எம்​.​வி.சேகர், தமிழக முற்​போக்கு மக்​கள் கட்சி தலை​வர் க.சக்​திவேல், பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன், தமிழ்​நாடு முஸ்​லிம் லீக் நிறுவன தலை​வர் வி.எம்​.எஸ்​.​முஸ்​த​பா, இந்​திய கிறிஸ்தவ மதச்​சார்​பற்ற கட்சி தலை​வர் எம்.​எஸ்​.​மார்​டின், தமிழ்​நாடு ஐஎன்​டி​யுசி மூத்த தலை​வர் மு.பன்​னீர்​செல்​வம் உள்​ளிட்​டோரும் வாழ்​த்​துகளை தெரிவித்​துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.