Priyanka: `நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்..!' – திருமணம் குறித்து அறிவித்த பிரியங்கா!

தொகுப்பாளினியாக பரிச்சயமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சூப்பர் சிங்கர் ஜூனியர் 10′ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று பிரியங்காவிற்கு வசி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

பிரியங்கா – வசி

டும் டும் டும்

பிரியங்கா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக அறிவித்திருக்கிறார். அதில், `லைஃப் அப்டேட்’ என்கிற குறிப்புடன் `Going to be chasing sunsets with this one’ எனப் பதிவிட்டு அவருடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். நீண்ட நாள் நண்பரான வசியை தற்போது கரம் பிடித்திருக்கிறார் பிரியங்கா. 

வருகிற ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி `பிக்பாஸ் சீசன் 5’ல் போட்டியாளர்களாக பங்கேற்றிருந்த அமீர், பாவ்னி இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. பிக்பாஸ் வீட்டிலேயே அமீர் பாவ்னியை காதலிப்பதை வெளிப்படுத்தியிருந்தார். வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு இருவரும் காதலிப்பதை அவர்களுடைய ரசிகர்களுக்கு அறிவித்திருந்தனர். அதே சீனனில் அவர்களுடன் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் பிரியங்கா. இந்நிலையில், பிரியங்காவின் திருமணத்திற்கு அமீர் – பாவ்னி இருவரும் ஜோடியாக சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அவர்களுடன் நிரூப்பும் கலந்து கொண்டிருக்கிறார்.

பிரியங்கா – வசி

பிரியங்காவின் நெருங்கிய நண்பர்கள் பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர். இவர்களுடைய திருமணம் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. 

வாழ்த்துகள் பிரியங்கா – வசி! 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.