சென்​னை, புறநகர் பகு​தி​களில் வெப்​பம் தணிந்​தது: பலத்த காற்​றுடன் கொட்டி தீர்த்த கனமழை

சென்னை: சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நேற்று காலை திடீரென பலத்த காற்​றுடன் பரவலாக கனமழை பெய்​தது. இதனால் வெப்​பம் சற்று தணிந்​தது. தமிழகத்​தில் பிப்​ர​வரி மாதம் முதலே வெப்​பம் வாட்​டத் தொடங்​கியது. அவ்​வப்​போது வெப்​பநிலை உயர்ந்​தும் காணப்​பட்​டது. கடந்த 12-ம் தேதி சென்னை நுங்​கம்​பாக்​கம், மீனம்​பாக்​கம் உள்​ளிட்ட 9 நகரங்​களில் 100 டிகிரி ஃபாரன்​ஹீட்​டுக்கு மேல் வெப்​பம் பதி​வாகி இருந்​தது.

இந்​நிலை​யில் யாரும் எதிர்​பா​ராத வகை​யில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​டது. 9 மணிக்கு மேல் சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் லேசான தூறலுடன் மழை பெய்​யத் தொடங்​கியது. பின்​னர் கனமழை​யாக மாறியது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று திடீரென
மழை வெளுத்து வாங்கிய நிலையில், வண்டலூர் – கேளம்பாக்கம்
சாலையில் மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.

மாணவர்கள், பணியாளர்கள் அவதி: குறிப்​பாக, சேப்​பாக்​கம், மயிலாப்​பூர், ராயப்​பேட்​டை, வேப்​பேரி, புரசை​வாக்​கம், பெரம்​பூர், சைதாப்​பேட்​டை, கிண்​டி, ஆலந்​தூர், கோயம்​பேடு, வளசர​வாக்​கம், வடபழனி, அரும்​பாக்​கம், நுங்​கம்​பாக்​கம் மற்​றும் புறநகர் பகு​தி​களான மேட​வாக்​கம், தாம்​பரம், ஆவடி, பூந்​தமல்​லி, மீஞ்​சூர் உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் பலத்த காற்​றுடன் கன மழை பெய்தது.

இதனால் பள்​ளி, கல்​லூரி​களுக்​குச் செல்​லும் மாணவர்​களும், பணிக்​குச் செல்​லும் பணி​யாளர்​களும், தனி​யார் நிறுவன ஊழியர்​களும் நேரத்​தோடு கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் அலு​வல​கங்​களுக்கு செல்ல முடி​யாமல் அவதிப்​பட்​டனர். கனமழை காரண​மாக மெட்ரோ ரயில்​களில் கூட்​டம் நிரம்பி வழிந்​தது.

சென்​னை, புறநகர் பகு​தி​களில் பல்​வேறு சாலைகள் மற்​றும் குடி​யிருப்பு பகு​தி​களில் மழை நீர் தேங்​கியது. இதனால் பூந்​தமல்லி நெடுஞ்​சாலை, பழைய மாமல்​லபுரம் சாலை, அண்ணா சாலை, வேளச்​சேரி நெடுஞ்​சாலை, ஜிஎஸ்டி சாலை உள்​ளிட்​ட​வற்​றில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

சேலையூர் அகரம்தென் சாலையில் பெருக்கெடுத்து ஓடும்
மழை வெள்ளத்தில் செல்லும் வாகனங்கள்.
| படங்கள்: எம்.முத்துகணேஷ் |

திடீர் மழை தொடர்​பாக, சென்னை வானிலை ஆய்வு மையஅதி​காரி​களிடம் கேட்​ட​போது, “கோடை காலத்​தில் வெப்​பம் அதி​கரிக்​கும்​போது தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்​றில் வேக மாறு​பாடு ஏற்​படு​வ​தால், காற்று சுழற்சி உரு​வாகி திடீரென மேகமூட்​டங்​கள் உரு​வாவது வழக்​க​மான ஒன்​று. அவ்​வாறு உரு​வான மேகக்​கூட்​டங்​களால் மழை பெய்​துள்​ளது” என்​றனர்.

8 இடங்களில் கனமழை: நேற்று காலை 8.30 மணி முதல் பிற்​பகல் ஒரு மணி வரை பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக மேட​வாக்​கத்​தில் 16 செமீ, வளசர​வாக்​கம் மற்​றும் சாலிகி​ராமத்​தில் 11 செமீ, நெற்​குன்​றத்​தில் 10 செமீ மழை பெய்​துள்​ளது. மொத்​தத்​தில் 8 இடங்​களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்​துள்​ளது.

சித்​திரை மாதம் பிறந்​து, கோடை வெயில் சுட்​டெரித்து வந்த நிலை​யில், திடீரென கனமழை பெய்​த​தால் சென்​னை, புறநகர் பகு​தி​களில்​ வெப்​பம்​ தணிந்​து ரம்​மிய​மான சூழல்​ நில​வியது.

தாம்பரம் – வேளச்சேரி சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து
ஓடிய மழைநீரில் செல்லும் வாகனங்கள். | படம்: எம்.முத்துகணேஷ் |

விமான சேவை​கள் பாதிப்பு: மும்​பை​யில் இருந்து வந்த ஏர் இந்​தியா விமானம் சென்​னை​யில் தரை​யிறங்க முடி​யாத​தால் பெங்​களூரு​வுக்கு திருப்​பி​ விடப்​பட்​டது. ஹைத​ரா​பாத், குவாஹாட்​டி, பெங்​களூரு​வில் இருந்து வந்த இண்​டிகோ ஏர்​லைன்ஸ் உள்​ளிட்ட 5-க்​கும் மேற்​பட்ட விமானங்​கள் சென்​னை​யில் தரை​யிறங்க முடி​யாமல் நீண்ட நேரம் வானில் வட்​டமடித்​தன.

மழை குறைந்து வானிலை சீரான பிறகு, அந்த விமானங்​கள் ஒன்​றன்​பின் ஒன்​றாக தரை​யிறங்​கின. பெங்​களூருக்கு திருப்​பி​ விடப்​பட்ட விமான​மும் பின்​னர் சென்​னை​யில் தரை​யிறங்​கியது. டெல்​லி, மும்​பை, கொச்​சி, கோவை, தோகா செல்​லும் விமானங்​கள் உட்பட 10-க்​கும் மேற்​பட்ட வி​மானங்​கள் தாமத​மாக புறப்​பட்​டு சென்​றன.

அதிமுக போராட்டத்துக்காக சைதாப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த
பேனர், பலத்த காற்று, மழையால் சரிந்து விழுந்தது. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

ஏப். 27 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்தி குறிப்​பில், ‘‘தென்​னிந்​திய பகு​தி​களின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகு​தி​களில், கிழக்கு மற்​றும் மேற்கு திசை காற்று சந்​திக்​கும் பகுதி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று முதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் வழக்​கத்தை விட அதி​கபட்ச வெப்​பநிலை 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை வெப்​பம் அதி​க​மாக இருக்க வாய்ப்​புள்​ளது. சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்​ப்புள்​ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.