சென்னை: போராட்டம் நடத்தி வரும் விசைத்தறியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்த அமைச்சர்கள், விசைத்தறியாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர். மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகமிகக் குறைவு என்றும், எனவே, […]
