விருதுநகர்: 7 வயது சிறுமிக்குப் பாலியல் கொடுமை; பக்கத்து வீட்டுக்காரர் கைது; நடந்தது என்ன?

விருதுநகர் அருகே 7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபரை விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.

அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் நாராயணன். இவரின் வீட்டுக்கு அருகே பள்ளி பயிலும் 7 வயது சிறுமி தனது தோழிகளுடன் விளையாடுவது வழக்கம்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்நிலையில் கிருஷ்ணன் நாராயணனின் உறவினர் பெண், தான் வாங்கிய முருங்கைக்காய்களை, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 7வயது சிறுமியிடம் கொடுத்து அதைக் கிருஷ்ணன் நாராயணனிடம் கொடுத்து வரும்படி அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி சிறுமியும், அவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது வலுக்கட்டாயப்படுத்தி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதே போன்று, தொடர்ச்சியாகக் கிருஷ்ணன் நாராயணன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துள்ளார்.

இதனால் பயந்துபோன சிறுமி, அதன்பின்னர் தெருவில் அவரைக் கண்டாலே வீட்டுக்குள் ஓடிவந்து ஒளிந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதைப் பார்த்துச் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், அவரை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நடந்த கொடுமையைச் சொல்லி சிறுமி பயந்தவாறே அழுதுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

இதையடுத்து, பாலியல் அத்துமீறல் தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி கிருஷ்ணன் நாராயணனைக் கைது செய்தனர்” எனக் கூறினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.