சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்கும் ரூ. 48 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு, தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் (Tamil Nadu Coastal Zone Management Authority) அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மொத்தம் 466 கி.மீ […]
