காஷ்மீரில் திடீர் வெள்ளம்: நிலச்சரிவால் 3 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் ரம்​பான் மாவட்​டத்​தில் நேற்று திடீரென ஏற்​பட்ட மேகவெடிப்​பால் பலத்த மழை பெய்​தது. இதனால் பல பகு​தி​களில் வெள்​ளம் ஏற்​பட்​டது. அத்​துடன் நிலச்​சரி​வும் ஏற்​பட்​டது. செரி பக்னா கிராமத்​தில் வீடு​கள் வெள்​ளத்​தில் அடித்து செல்​லப்​பட்​டன.

இதில் அகிப் அகமது, மொகமது சாகிப் சகோ​தரர்​கள் உட்பட 3 பேர் உயி​ரிழந்​தனர். பாதிக்​கப்​பட்ட இடங்​களில் மீட்​புப் படை​யினர் விரைந்து சென்​றனர். மேலும், தரம் குந்த் கிராமத்​தில் வெள்​ளம், நிலச்​சரி​வில் சிக்​கி​யிருந்த நூற்​றுக்​கும் மேற்​பட்​டோரை மீட்​டனர். இந்​தப் பகு​தி​யிலும் பல வீடு​கள் வெள்​ளத்​தில் அடித்து செல்​லப்​பட்​டன.

பலத்த மழை மற்​றும் வெள்​ளம், நிலச்​சரி​வால் நஷ்ரி, பனிஹால் இடையே ஜம்மு – நகர் தேசிய நெடுஞ்​சாலை மூடப்​பட்​டது. இதனால் நூற்​றுக்​கணக்​கான வாக​னங்​கள் நெடுஞ்​சாலை​யில் சிக்​கி​யுள்​ளன. மழை நிற்​கும் வரை​யில் யாரும் வெளி​யில் வரவேண்​டாம் என்று அதி​காரி​கள் எச்​சரித்​துள்​ளனர்.

முன்​ன​தாக கடந்த சனிக்​கிழமை பெய்த மழை​யின் போது மின்​னல் தாக்கி ரீஸி அர்​னாஸ் பகு​தி​யில் 2 பேர் உயி​ரிழந்​தனர். உதம்​பூர் எம்​.பி.​யும் மத்​திய அமைச்​சரு​மான ஜிதேந்​திர சிங், பாதிக்​கப்​பட்​ட இடங்​களில்​ தேவை​யான உதவி​களை செய்​ய​வும்​ உத்​தர​விட்டுள்ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.