ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ராணுவ வீரர்கள் போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்பட 26 பேர் பலியானதாக ஆங்கில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கவிப்படவில்லை. ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஜம்முகாஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்பொறுப்பேற்றுள்ளது. பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நாட்டையே உலுக்கியுள்ள ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகர்: 0194-2457543, 0194-2483651 அடில் ஃபரீத், ஏடிசி ஸ்ரீநகர்: 7006058623,