MI vs LSG: “பூரான், பண்ட் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்று தெரியும்'' – ஆட்ட நாயகன் வில் ஜேக்ஸ்

ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி, ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து தோல்வியடைந்தது.

வில் ஜேக்ஸ்
வில் ஜேக்ஸ்

இப்போட்டியில் முக்கியமான நேரத்தில் நிக்கோலஸ் பூரான், பண்ட் விக்கெட் வீழ்த்திய வில் ஜேக்ஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய வில் ஜேக்ஸ், “நான் எப்போதும் பந்து வீசக்கூடிய பேட்ஸ்மேனாக இருப்பேன். எனது பந்துவீச்சு எனக்கும் அணிக்கும் முக்கியமானது. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, என்னுடைய பந்துவீச்சில் நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். பண்ட் மற்றும் பூரான் ஆகியோரின் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்று எங்களுக்கு தெரியும். பூரான் விக்கெட்டை எடுத்த பிறகு நான் நிம்மதியடைந்தேன்.

ஹர்திக் பாண்டியா - வில் ஜேக்ஸ்
ஹர்திக் பாண்டியா – வில் ஜேக்ஸ்

இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசுவதற்கான வாய்ப்பை நான் மேலும் பெற்றேன் அதை நான் விரும்பினேன். ஒரு அணியாக நல்ல ரிதம் நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அதை நாங்கள் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும். பும்ரா ஒரு அபாரமான பந்துவீச்சாளர். அடுத்த வரும் போட்டிகளில் அவரை எதிர்கொள்வது மிகவும் கடினம். அவருடைய அணியில் நான் இருப்பதால் எனக்கு மகிழ்ச்சி.” என்று கூறினார்.

இப்போட்டியில், பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.