சென்னை: செங்கல்பட்டு அருகே வசித்துவரும் விசிக எம்எல்ஏவான, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபாவுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வசுவசமுத்திரத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர், உறவினரின் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்ததில் குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியின் விசிக எம்எல்ஏ பனையூர் மு.பாபு. இவர் மீது கண்ணெல்லாம் புண்ணாகும் அளவுக்கு […]
