கனடாவுக்கு புலம்பெயர்ந்த இளம்தம்பதி கைக்கு வந்த பல கோடி பணம்! சொந்த நாட்டுக்கு செல்லப்போகும் மகிழ்ச்சி


கனடாவுக்கு புலம்பெயர்ந்துசாதாரண நிலையில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் பரிசு பணத்தை எடுத்து சென்று தங்கள் சொந்த நாட்டில் வீடுகளை வாங்கவுள்ளனர்.

பிரிட்டீஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் வசிக்கும் தம்பதி Emma மற்றும் Seabata Makhakhe.
இந்நிலையில் தாங்கள் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததா என்பதை Seabata பார்த்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அதன்படி ரூ. 7,97,83,989.05 (இலங்கை மதிப்பில்) விழுந்ததை அவர் கண்டுபிடித்தார். பின்னர் தம்பதிகள் மகிழ்ச்சியில் கத்தி கூச்சலிட்டனர்.

இதனை தொடர்ந்து தங்கள் சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு பணத்தை எடுத்து சென்று கேப்டவுனில் தங்களுக்கு ஒரு பிரம்மாண்ட வீடும், Seabataன் தாயாருக்கு ஒரு வீடும் வாங்க முடிவு செய்துள்ளனர்.

இதோடு தங்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காகவும் பணத்தை ஒதுக்கவுள்ளனர்.

இந்த லொட்டரி பரிசு என்பது தங்கள் வாழ்வை மற்றிய விடயம் மற்றும் கனவை நிஜமாக்கிய அதிர்ஷ்டம் என இருவரும் கூறியுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.